மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தரமாக உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவில் பிரசாதங்களில் கலப்படம் என்ற செய்தி மக்களை உலுக்கி வருகிறது. குறிப்பாக சாமி நம்பிக்கை உள்ளவர்களை அது கவலைக்குரியதாக்கியுள்ளது. சமீபத்தில் திருப்பதி கோவில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வந்த செய்தி அனைவரையும் அதிர வைத்தது. அதே திருப்பதி கோவில் லட்டில் குத்கா பாக்கெட் கிடந்ததும் சமீபத்தில் இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தரமாக உள்ளது என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களுள் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் 2019ம் ஆண்டு முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு அதன் மூலம் ஆயிரக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி வடை, அப்பம் உள்ளிட்டவைகளும் பிரசாதமாக விற்கப்பட்டு வருகிறது.
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு கோவில் பிரசாதங்கள் குறித்தும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் அழகர்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். பிரசாதம் தயாரிக்கும் உணவுக்கூடத்தை இவர் நேரடியாக ஆய்வு செய்தாா். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் கூறுகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் குறித்து பலமுறை ஆய்வு செய்துள்ளோம். லட்டு உள்பட அனைத்தும் சுத்தமாகவும் தரமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}