ஒரு குறையும் இல்லை.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தரமாக உள்ளது.. உணவு பாதுகாப்புத்துறை

Sep 26, 2024,02:44 PM IST

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தரமாக உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவில் பிரசாதங்களில் கலப்படம் என்ற செய்தி மக்களை உலுக்கி வருகிறது. குறிப்பாக சாமி நம்பிக்கை உள்ளவர்களை அது கவலைக்குரியதாக்கியுள்ளது. சமீபத்தில் திருப்பதி கோவில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வந்த செய்தி அனைவரையும் அதிர வைத்தது. அதே திருப்பதி கோவில் லட்டில் குத்கா பாக்கெட் கிடந்ததும் சமீபத்தில் இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தரமாக உள்ளது என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 




தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களுள் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் 2019ம் ஆண்டு முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு அதன் மூலம் ஆயிரக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி வடை, அப்பம் உள்ளிட்டவைகளும் பிரசாதமாக விற்கப்பட்டு வருகிறது.


திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு கோவில் பிரசாதங்கள் குறித்தும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் அழகர்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். பிரசாதம் தயாரிக்கும் உணவுக்கூடத்தை இவர் நேரடியாக ஆய்வு செய்தாா். இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம பாண்டியன் கூறுகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் குறித்து பலமுறை ஆய்வு செய்துள்ளோம். லட்டு உள்பட அனைத்தும் சுத்தமாகவும் தரமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது என்று கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்