மதுரை: கல்குவாரியில் நடந்த வெடிவிபத்து எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் அருகே ஆர்எஸ்ஆர் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள பாறைகளை உடைக்க பயன்படுத்துவதற்காக வெடி பொருட்கள் இறக்கப்பட்டது. அந்த வெடி பொருட்கள் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் வெடி பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் உடல் சிதறி இறந்தனர்.
இந்நிலையில், இக்கல்குவாரியின் பங்குதாரரான ஆவியூரை சேர்ந்த சேது என்பவர் ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கல்குவாரியின் உரிமையாளரான ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். வெடி விபத்தில் உயரிழந்த 3 பேரின் குடும்பத்தினர்களுக்கு கல்குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவராணமாக வழங்கப்பட்டது. இதில் 50,000 ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ள 11.5 லட்சம் காசோலையாகவும் வழங்கப்பட்டது.
வெடி விபத்து எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில் தீயணைப்புத்துறை, காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் கல்குவாரிகளில் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}