மதுரை: கல்குவாரியில் நடந்த வெடிவிபத்து எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் அருகே ஆர்எஸ்ஆர் கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள பாறைகளை உடைக்க பயன்படுத்துவதற்காக வெடி பொருட்கள் இறக்கப்பட்டது. அந்த வெடி பொருட்கள் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் வெடி பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் உடல் சிதறி இறந்தனர்.

இந்நிலையில், இக்கல்குவாரியின் பங்குதாரரான ஆவியூரை சேர்ந்த சேது என்பவர் ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கல்குவாரியின் உரிமையாளரான ராஜ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். வெடி விபத்தில் உயரிழந்த 3 பேரின் குடும்பத்தினர்களுக்கு கல்குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவராணமாக வழங்கப்பட்டது. இதில் 50,000 ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ள 11.5 லட்சம் காசோலையாகவும் வழங்கப்பட்டது.
வெடி விபத்து எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில் தீயணைப்புத்துறை, காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் கல்குவாரிகளில் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}