வாங்க.. சிங்கப்பூர் போகலாம்.. மதுரையிலிருந்து தினசரி.. புதிய சேவை!

Oct 13, 2023,10:41 AM IST

மதுரை: மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு அக்டோபர் 22ம் தேதியிலிருந்து நேரடி விமானத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இயக்கவுள்ளது.


பறந்து செல்ல மனம் இருந்தும்.. என்பது போல வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானம் மூலம் பறக்க மாட்டோமா என்ற எண்ணம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவலாக உள்ளது. அப்படிப்பட்ட விமான போக்குவரத்து பலரின் கனவாகவும்  இருக்கிறது. இன்று இந்தக் கனவு பலருக்கும் நிஜமாகி விட்டது.




ஒரு காலத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் போவதே பெரிய கனவாக இருந்தது. பின்னர் அது மாறியது. இன்று மதுரையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும், நாடுகளுக்கும் விமான சேவை நடந்து வருகிறது. அந்த வகையில் இப்போது இன்னொரு பெருமை கிடைத்துள்ளது.


வருகிற 22ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை இயக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 


இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி திருநாள் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் முன்கூட்டியே ரயில், பஸ் போன்ற போக்குவரத்து சாதனங்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழகத்தைச் சேர்ந்த நிறைய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வசதிக்கேற்றார் போல் பல விமான நிறுவனங்கள் புதிய விமானங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.


அந்த வரிசையில் மதுரை டூ சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் டூ மதுரை என இரு மார்க்கத்திலும் நேரடியாக தினசரி விமான சேவையை ஏர் இந்தியா  எக்ஸ்ப்ரஸ் நிறுவனம் வரும் 22 ஆம் தேதி முதல் வழங்க உள்ளது.  சிங்கப்பூரில் நிறைய தமிழ் மக்கள் வாழ்கின்றனர். சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை என்ற அறிவிப்பு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்காரர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வமான ஏர் இந்தியா விமான எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.


பிறகென்ன பிளைட்டைப் பிடிங்க.. சிங்கப்பூருக்கு ஜாலியா போய்ட்டு வாங்க!

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்