வாடகைக் கட்டடங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிப்பதா?.. சேலம், ஈரோடு, மதுரையில் வணிகர்கள் போராட்டம்

Nov 29, 2024,02:06 PM IST

மதுரை: வணிகப் பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கு மத்திய அரசு விதித்த 18 சதவீத ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி சேலம், ஈரோடு மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த மாதம் 10ம் தேதி முதல் வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முழுவதும் வணிகர்கள் இன்று கடையடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஜி.எஸ்.டியால் சிறு வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த தீர்மானத்துக்கு எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 




இந்த தீர்மானத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு உணவுப்பொரும் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து  கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இது மட்டுமின்றி, இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வணிகப் பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கு மத்திய அரசு விதித்த 18 சதவீத ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்