மதுரை: வணிகப் பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கு மத்திய அரசு விதித்த 18 சதவீத ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி சேலம், ஈரோடு மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் 10ம் தேதி முதல் வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முழுவதும் வணிகர்கள் இன்று கடையடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஜி.எஸ்.டியால் சிறு வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த தீர்மானத்துக்கு எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்த தீர்மானத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு உணவுப்பொரும் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி, இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வணிகப் பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கு மத்திய அரசு விதித்த 18 சதவீத ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}