வாடகைக் கட்டடங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிப்பதா?.. சேலம், ஈரோடு, மதுரையில் வணிகர்கள் போராட்டம்

Nov 29, 2024,02:06 PM IST

மதுரை: வணிகப் பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கு மத்திய அரசு விதித்த 18 சதவீத ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தி சேலம், ஈரோடு மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த மாதம் 10ம் தேதி முதல் வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில முழுவதும் வணிகர்கள் இன்று கடையடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஜி.எஸ்.டியால் சிறு வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த தீர்மானத்துக்கு எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 




இந்த தீர்மானத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு உணவுப்பொரும் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து  கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களில் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இது மட்டுமின்றி, இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வணிகப் பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கு மத்திய அரசு விதித்த 18 சதவீத ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

அதிகம் பார்க்கும் செய்திகள்