நெல்லை மக்களே.. இளையராஜாவின் இசை மழையில் நனைய.. நீங்க தயாரா.. இன்று மாலை!

Jan 17, 2025,11:18 AM IST

நெல்லை: நெல்லையில் இன்று மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜா பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.


திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே உள்ள முத்தூர் கிராம சாலையில் இன்று இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி நேரலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.  மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த இசை கச்சேரி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட பின்னணி பாடகர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்கின்றனர். 




நெல்லையில் முதல் முறையாக இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதால் இதுவரை 10,000 ரசிகர்கள் பங்கு பெற முன் அனுமதி சீட்டை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் இளையராஜாவைக் காண திரளான ரசிகர்கள் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக இளையராஜா பங்குபெறும் இந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சி திருநெல்வேலியில் குறுகலான பாதையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த இசை கச்சேரிக்கு வருபவர்கள் குறுகலான பாதை வழியில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.


இசை நிகழ்ச்சிக்காக நெல்லை வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜா 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட இளையராஜாவுக்கு சிறந்த மரியாதை அளிக்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்