நெல்லை: நெல்லையில் இன்று மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜா பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே உள்ள முத்தூர் கிராம சாலையில் இன்று இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி நேரலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த இசை கச்சேரி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட பின்னணி பாடகர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

நெல்லையில் முதல் முறையாக இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதால் இதுவரை 10,000 ரசிகர்கள் பங்கு பெற முன் அனுமதி சீட்டை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் இளையராஜாவைக் காண திரளான ரசிகர்கள் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இளையராஜா பங்குபெறும் இந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சி திருநெல்வேலியில் குறுகலான பாதையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த இசை கச்சேரிக்கு வருபவர்கள் குறுகலான பாதை வழியில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
இசை நிகழ்ச்சிக்காக நெல்லை வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜா 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட இளையராஜாவுக்கு சிறந்த மரியாதை அளிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}