நெல்லை: நெல்லையில் இன்று மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜா பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அருகே உள்ள முத்தூர் கிராம சாலையில் இன்று இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி நேரலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மாலை 6 மணிக்கு துவங்கும் இந்த இசை கச்சேரி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட பின்னணி பாடகர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
நெல்லையில் முதல் முறையாக இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதால் இதுவரை 10,000 ரசிகர்கள் பங்கு பெற முன் அனுமதி சீட்டை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் இளையராஜாவைக் காண திரளான ரசிகர்கள் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதனால் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இளையராஜா பங்குபெறும் இந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சி திருநெல்வேலியில் குறுகலான பாதையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த இசை கச்சேரிக்கு வருபவர்கள் குறுகலான பாதை வழியில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
இசை நிகழ்ச்சிக்காக நெல்லை வருகை தந்துள்ள இசைஞானி இளையராஜா 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட இளையராஜாவுக்கு சிறந்த மரியாதை அளிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}