காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி... காலத்தை உருவாக்கியவன் மகாகவி.. கவிஞர் வைரமுத்து புகழாஞ்சலி

Sep 11, 2024,06:21 PM IST

சென்னை:   காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி என்று கவிக்கும் மகாகவிக்கும். உள்ள வேறுபாட்டினை தெரிவித்து பாரதியாரின் நினைவு நாளான இன்று பாரதியாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.


பாரதியார் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்து, 1921 செப்டம்பர் 11ம் தேதி இறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் கவிதை மற்றும் உரைநடை எழுதுவதில் தனித்திறமை பெற்றவர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தியவர். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.


நவீன தமிழ் கவிஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார். இவருக்கு மகாகவி என்ற புனைபெயரும் உண்டு. பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக போரடியவர். இவரின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரதியாரின் நினைவு நாளில் இன்றைய கால கவிஞர் வைரமுத்து கவி அஞ்சலி செலுத்தும் விதமாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:




கவிக்கும் மகாகவிக்கும்

என்ன வேறுபாடு?


காலத்தால் உருவாக்கப்பட்டவன்

கவி;

காலத்தை உருவாக்கியவன்

மகாகவி


ஏகாதிபத்தியத்துக்கு எதிராக

இந்திய விடுதலைக்கு ஆதரவாக

ஒரு ஜனநாயகக் காலத்தை -


பண்டித மொழிக்கு எதிராக

பாமர மொழிக்கு ஆதரவாக

ஓர் இலக்கியக் காலத்தை -


உருவாக்கியதில்

பாரதி ஒரு மகாகவி


எரிக்கப்படுகிற வரைக்கும்

வாழ்வில் அப்படி

வறுமைப்பட்டவனும்

எரித்து முடித்தபிறகு 

வாழ்வில் அப்படிப்

பெருமைப்பட்டவனும்

அவனைப்போல்

இன்னொருவர் இல்லை


இன்று அவன்

உடல் மறைந்த நாள்


அவன் 

நீங்கா நினைவுக்கும்

தூங்காப் புகழுக்கும் 

தமிழ் அஞ்சலி என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ராஜ்யசபா எம்.பி ஆனார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.. அதிமுக, திமுக வேட்பாளர்களும் வெற்றி!

news

அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?

news

அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

news

அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!

news

விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எப்படி இருக்கிறார்?

news

அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?

news

காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!

news

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்

news

என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்