காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி... காலத்தை உருவாக்கியவன் மகாகவி.. கவிஞர் வைரமுத்து புகழாஞ்சலி

Sep 11, 2024,06:21 PM IST

சென்னை:   காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி என்று கவிக்கும் மகாகவிக்கும். உள்ள வேறுபாட்டினை தெரிவித்து பாரதியாரின் நினைவு நாளான இன்று பாரதியாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.


பாரதியார் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்து, 1921 செப்டம்பர் 11ம் தேதி இறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் கவிதை மற்றும் உரைநடை எழுதுவதில் தனித்திறமை பெற்றவர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தியவர். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.


நவீன தமிழ் கவிஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார். இவருக்கு மகாகவி என்ற புனைபெயரும் உண்டு. பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக போரடியவர். இவரின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரதியாரின் நினைவு நாளில் இன்றைய கால கவிஞர் வைரமுத்து கவி அஞ்சலி செலுத்தும் விதமாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:




கவிக்கும் மகாகவிக்கும்

என்ன வேறுபாடு?


காலத்தால் உருவாக்கப்பட்டவன்

கவி;

காலத்தை உருவாக்கியவன்

மகாகவி


ஏகாதிபத்தியத்துக்கு எதிராக

இந்திய விடுதலைக்கு ஆதரவாக

ஒரு ஜனநாயகக் காலத்தை -


பண்டித மொழிக்கு எதிராக

பாமர மொழிக்கு ஆதரவாக

ஓர் இலக்கியக் காலத்தை -


உருவாக்கியதில்

பாரதி ஒரு மகாகவி


எரிக்கப்படுகிற வரைக்கும்

வாழ்வில் அப்படி

வறுமைப்பட்டவனும்

எரித்து முடித்தபிறகு 

வாழ்வில் அப்படிப்

பெருமைப்பட்டவனும்

அவனைப்போல்

இன்னொருவர் இல்லை


இன்று அவன்

உடல் மறைந்த நாள்


அவன் 

நீங்கா நினைவுக்கும்

தூங்காப் புகழுக்கும் 

தமிழ் அஞ்சலி என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்