சென்னை: காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி என்று கவிக்கும் மகாகவிக்கும். உள்ள வேறுபாட்டினை தெரிவித்து பாரதியாரின் நினைவு நாளான இன்று பாரதியாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
பாரதியார் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்து, 1921 செப்டம்பர் 11ம் தேதி இறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் கவிதை மற்றும் உரைநடை எழுதுவதில் தனித்திறமை பெற்றவர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தியவர். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.
நவீன தமிழ் கவிஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார். இவருக்கு மகாகவி என்ற புனைபெயரும் உண்டு. பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக போரடியவர். இவரின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரதியாரின் நினைவு நாளில் இன்றைய கால கவிஞர் வைரமுத்து கவி அஞ்சலி செலுத்தும் விதமாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:

கவிக்கும் மகாகவிக்கும்
என்ன வேறுபாடு?
காலத்தால் உருவாக்கப்பட்டவன்
கவி;
காலத்தை உருவாக்கியவன்
மகாகவி
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக
இந்திய விடுதலைக்கு ஆதரவாக
ஒரு ஜனநாயகக் காலத்தை -
பண்டித மொழிக்கு எதிராக
பாமர மொழிக்கு ஆதரவாக
ஓர் இலக்கியக் காலத்தை -
உருவாக்கியதில்
பாரதி ஒரு மகாகவி
எரிக்கப்படுகிற வரைக்கும்
வாழ்வில் அப்படி
வறுமைப்பட்டவனும்
எரித்து முடித்தபிறகு
வாழ்வில் அப்படிப்
பெருமைப்பட்டவனும்
அவனைப்போல்
இன்னொருவர் இல்லை
இன்று அவன்
உடல் மறைந்த நாள்
அவன்
நீங்கா நினைவுக்கும்
தூங்காப் புகழுக்கும்
தமிழ் அஞ்சலி என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}