காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி... காலத்தை உருவாக்கியவன் மகாகவி.. கவிஞர் வைரமுத்து புகழாஞ்சலி

Sep 11, 2024,06:21 PM IST

சென்னை:   காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி என்று கவிக்கும் மகாகவிக்கும். உள்ள வேறுபாட்டினை தெரிவித்து பாரதியாரின் நினைவு நாளான இன்று பாரதியாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.


பாரதியார் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்து, 1921 செப்டம்பர் 11ம் தேதி இறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் கவிதை மற்றும் உரைநடை எழுதுவதில் தனித்திறமை பெற்றவர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தியவர். கவிதையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.


நவீன தமிழ் கவிஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் இவர். சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார். இவருக்கு மகாகவி என்ற புனைபெயரும் உண்டு. பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக போரடியவர். இவரின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாரதியாரின் நினைவு நாளில் இன்றைய கால கவிஞர் வைரமுத்து கவி அஞ்சலி செலுத்தும் விதமாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை:




கவிக்கும் மகாகவிக்கும்

என்ன வேறுபாடு?


காலத்தால் உருவாக்கப்பட்டவன்

கவி;

காலத்தை உருவாக்கியவன்

மகாகவி


ஏகாதிபத்தியத்துக்கு எதிராக

இந்திய விடுதலைக்கு ஆதரவாக

ஒரு ஜனநாயகக் காலத்தை -


பண்டித மொழிக்கு எதிராக

பாமர மொழிக்கு ஆதரவாக

ஓர் இலக்கியக் காலத்தை -


உருவாக்கியதில்

பாரதி ஒரு மகாகவி


எரிக்கப்படுகிற வரைக்கும்

வாழ்வில் அப்படி

வறுமைப்பட்டவனும்

எரித்து முடித்தபிறகு 

வாழ்வில் அப்படிப்

பெருமைப்பட்டவனும்

அவனைப்போல்

இன்னொருவர் இல்லை


இன்று அவன்

உடல் மறைந்த நாள்


அவன் 

நீங்கா நினைவுக்கும்

தூங்காப் புகழுக்கும் 

தமிழ் அஞ்சலி என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்