டெல்லி: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியினால் விமான டிக்கெட் விலை எகிறி வருகிறது. 600 சதவீதம் அளவிற்கு டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளன விமான நிறுவனங்கள்.
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகாகும்பமேளா நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ம் தேதி துவங்கி இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. கிட்டதட்ட 45 நாட்கள் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் லட்சக்கணக்கானவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு குவிந்து வருகின்றனர். கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரைக்கும் 11.47 கோடி பேர் பங்கேற்றியுள்ளனர். டெல்லி, மும்பை,பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருவதால், விமான கட்டணம் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்த விமான தேவையை பூர்த்தி செய்வதற்காக டிஜிசிஏ விமான போக்குவரத்து இந்த ஜனவரியில் மட்டும் 81 கூடுதல் விமானங்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி - பிரயாக்ராஜ் இடையேயான விமானங்களுக்கான விமான கட்டணம்21 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
டெல்லி- வாரணாசி இடையிலான ஒருவழி டிக்கெட்டுகளின் விலை 20,000 முதல் 40,000 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்து இருந்தும், டிக்கெட்டுகள் அனைத்து உடனடியாக விற்று தீர்ந்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கட்டண உயர்வை பரிசீலித்து நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}