டெல்லி: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சியினால் விமான டிக்கெட் விலை எகிறி வருகிறது. 600 சதவீதம் அளவிற்கு டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளன விமான நிறுவனங்கள்.
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகாகும்பமேளா நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13ம் தேதி துவங்கி இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. கிட்டதட்ட 45 நாட்கள் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புனித நீராடினால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் லட்சக்கணக்கானவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு குவிந்து வருகின்றனர். கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரைக்கும் 11.47 கோடி பேர் பங்கேற்றியுள்ளனர். டெல்லி, மும்பை,பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருவதால், விமான கட்டணம் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்த விமான தேவையை பூர்த்தி செய்வதற்காக டிஜிசிஏ விமான போக்குவரத்து இந்த ஜனவரியில் மட்டும் 81 கூடுதல் விமானங்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி - பிரயாக்ராஜ் இடையேயான விமானங்களுக்கான விமான கட்டணம்21 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
டெல்லி- வாரணாசி இடையிலான ஒருவழி டிக்கெட்டுகளின் விலை 20,000 முதல் 40,000 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது. விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்து இருந்தும், டிக்கெட்டுகள் அனைத்து உடனடியாக விற்று தீர்ந்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கட்டண உயர்வை பரிசீலித்து நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}