சென்னை: விஜயசேதுபதியின் 50வது படமான மகாராஜா தமிழ்நாட்டில் 450, மற்ற மாநிலங்களில் 750, வெளிநாடுகளில் 800 என மொத்தம் 2000 ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருக்கின்றனர். குரங்கு பொம்மை படத்தை இயக்கி நித்திலன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, விஜோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 450, மற்ற மாநிலங்களில் 750, வெளிநாடுகளில் 800 என மொத்தம் 2000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கதாநாயகன் விஜய் சேதுபதி ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார், தனது மனைவி இறப்பிற்கு பின் தனது மகளை வளர்ந்து வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சம்பவம் நடக்கிறது. இதையடுத்து காவல் நிலையம் சென்ற விஜய் சேதுபதி லட்சுமி காணாமல் போனதாக புகார் செய்கிறார்.யார் அந்த லட்சுமி, எதற்காக புகார் அளிக்கிறார். விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்று பல கேள்விகளுக்கு இறுதியில் முடிவு கூறப்பட்டிருக்கும் படம் தான் மகாராஜா.
வாடிக்கையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தங்கம் விலை... சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1560 குறைவு!
சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா...கடிதம் எழுதி சமரசம் பேசும் பாகிஸ்தான்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
127 வது மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார்.. முதல்வர் மு.க ஸ்டாலின்!
விஷ்ணுபதி புண்ணிய காலம் 2025 : புண்ணியம் சேர பெருமாளை வழிபடும் முறை
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மே 15, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் பழனிச்சாமியின் வேலையாக இருக்கிறது: முதல்வர் தாக்கு!
விசாரித்தது சிபிஐ.. தீர்ப்பு வழங்கியது.. நீதிமன்றம்.. இதில் ஸ்டாலின் பங்கு என்ன?எடப்பாடி பழனிச்சாமி!
{{comments.comment}}