சென்னை: விஜயசேதுபதியின் 50வது படமான மகாராஜா தமிழ்நாட்டில் 450, மற்ற மாநிலங்களில் 750, வெளிநாடுகளில் 800 என மொத்தம் 2000 ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருக்கின்றனர். குரங்கு பொம்மை படத்தை இயக்கி நித்திலன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, விஜோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 450, மற்ற மாநிலங்களில் 750, வெளிநாடுகளில் 800 என மொத்தம் 2000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கதாநாயகன் விஜய் சேதுபதி ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார், தனது மனைவி இறப்பிற்கு பின் தனது மகளை வளர்ந்து வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சம்பவம் நடக்கிறது. இதையடுத்து காவல் நிலையம் சென்ற விஜய் சேதுபதி லட்சுமி காணாமல் போனதாக புகார் செய்கிறார்.யார் அந்த லட்சுமி, எதற்காக புகார் அளிக்கிறார். விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்று பல கேள்விகளுக்கு இறுதியில் முடிவு கூறப்பட்டிருக்கும் படம் தான் மகாராஜா.
கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கரூர் துயர சம்பவம்... ஹேமமாலினி தலைமையில்... தேஜ கூட்டணியில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு
கரூர் கூட்ட நெரிசல்.. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது.. சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி
கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
யாரைக் குறை கூறுவது...?? யார் மீது குற்றம் சாட்டுவது..?? மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??
{{comments.comment}}