சென்னை: விஜயசேதுபதியின் 50வது படமான மகாராஜா தமிழ்நாட்டில் 450, மற்ற மாநிலங்களில் 750, வெளிநாடுகளில் 800 என மொத்தம் 2000 ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருக்கின்றனர். குரங்கு பொம்மை படத்தை இயக்கி நித்திலன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, விஜோத் சாகர், பி.எல். தேனப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 450, மற்ற மாநிலங்களில் 750, வெளிநாடுகளில் 800 என மொத்தம் 2000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கதாநாயகன் விஜய் சேதுபதி ஒரு சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார், தனது மனைவி இறப்பிற்கு பின் தனது மகளை வளர்ந்து வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய சம்பவம் நடக்கிறது. இதையடுத்து காவல் நிலையம் சென்ற விஜய் சேதுபதி லட்சுமி காணாமல் போனதாக புகார் செய்கிறார்.யார் அந்த லட்சுமி, எதற்காக புகார் அளிக்கிறார். விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்று பல கேள்விகளுக்கு இறுதியில் முடிவு கூறப்பட்டிருக்கும் படம் தான் மகாராஜா.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
{{comments.comment}}