தேசத் தந்தை மகாத்மா காந்தி நினைவு நாள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

Jan 30, 2025,08:35 PM IST

சென்னை:  மகாத்மா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதேபோல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.


மகாத்மா காந்தியடிகளின் 78வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அஷசரிக்கப்பட்டு வருகிறது. 1948ம் ஆண்டு இதே நாளில்தான் நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். 




தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகளின்  உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். காந்தியடிகளின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.


இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுதந்திர இந்தியாவில் மதவெறி காரணமாக காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாற்றுத் துயரம் நடந்த இந்நாளில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் திருவுருவப்படத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில் நாமும் கலந்து கொண்டோம்.


மனிதர்களாகப் பிறந்த அனைவரும் சமம் - எவ்வித பேதமும் கூடாது என்கிற உணர்வினை என்றென்றும் விதைக்க உறுதி ஏற்போம்.


அண்ணல் காந்தியின் பணிகளை போற்றுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

news

தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

news

அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!

news

ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்