சென்னை: மகாத்மா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதேபோல துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.
மகாத்மா காந்தியடிகளின் 78வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அஷசரிக்கப்பட்டு வருகிறது. 1948ம் ஆண்டு இதே நாளில்தான் நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். காந்தியடிகளின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுதந்திர இந்தியாவில் மதவெறி காரணமாக காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாற்றுத் துயரம் நடந்த இந்நாளில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் திருவுருவப்படத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில் நாமும் கலந்து கொண்டோம்.
மனிதர்களாகப் பிறந்த அனைவரும் சமம் - எவ்வித பேதமும் கூடாது என்கிற உணர்வினை என்றென்றும் விதைக்க உறுதி ஏற்போம்.
அண்ணல் காந்தியின் பணிகளை போற்றுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}