சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நான் பேசியது மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகாவிஷ்ணு என்பவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது பேச்சு மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது போல உள்ளதாக கூறி தமிழ் ஆசிரியரான பார்வை மாற்றுத்திறனாளி சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சங்கருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மகாவிஷ்ணு. இது மேலும் சர்ச்சையானது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து சர்ச்சைக்கு இடமான 2 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் பணியிடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டது. அதேபோல் மகாவிஷ்ணு விவகாரம் குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மறுபக்கம் மகாவிஷ்ணு மீது போலீஸில் புகார்கள் குவிந்தன. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை அடுத்து ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}