அசோக் நகரில் பேசிய பேச்சு புண்படுத்தியிருந்தால்.. மன்னிப்பு கோருகிறேன்.. மகாவிஷ்ணு

Sep 27, 2024,05:29 PM IST

சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நான் பேசியது மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்று மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார்.


சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகாவிஷ்ணு என்பவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது பேச்சு மூட நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது போல உள்ளதாக கூறி தமிழ் ஆசிரியரான பார்வை மாற்றுத்திறனாளி  சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சங்கருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மகாவிஷ்ணு. இது மேலும் சர்ச்சையானது.




இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து சர்ச்சைக்கு இடமான 2 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களையும் பணியிடம் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டது. அதேபோல் மகாவிஷ்ணு விவகாரம் குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மறுபக்கம் மகாவிஷ்ணு மீது போலீஸில் புகார்கள் குவிந்தன. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


இதை அடுத்து ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூ டியூபில் வெளியிடப்பட்டதாகவும் மனுவில்  தெரிவித்துள்ளார்.


இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்டோபர் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்