மக்களுடன் முதல்வர் திட்டம்.. 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

Jul 27, 2024,03:51 PM IST

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டார் முதல்வர் மு க ஸ்டாலின்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் திமுக சார்பில்  தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், உள்ளிட்ட பல திட்டங்கள் பாராட்டை பெற்றுள்ளன. 




அந்த வரிசையில் பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி விரிவாக்கும் அடிப்படையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி கோவையில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் இந்த மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என வரையறுக்கப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நகர் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பெறப்பட்ட 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது இதனை தொடர்ந்து நகர்ப்புறங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டம் அண்மையில் ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


மதுரை, நாகப்பட்டனம், வேலூர், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்த கூட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மாவட்டம் வாரியாக மக்களிடமிருந்து எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டது.. எத்தனை முகாம்கள் நடத்தப்பட்டது.. பெறப்பட்ட மனுக்களில் இருந்து எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.. என்பது தொடர்பான விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்