மக்களுடன் முதல்வர்திட்டம் .. ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு..அசத்திய தமிழ்நாடு அரசு!

Jan 20, 2025,07:07 PM IST

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு.


திமுக ஆட்சி பொறுப்பேற்றிலிருந்து மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், உடனுக்குடன் பரிசீலனைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.




இத்திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 24 மாவட்டங்களில் உள்ள, 184 தாலுகாக்கள் தேர்வு செய்யப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. அதேபோல் நகர உள்ளாட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு புகார்கள் மீதான மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 


முதல் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு 9.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல் பட்டா மாறுதல் உட்பட 15 துறைகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒருங்கிணைந்து 44 அடிப்படை சேவைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 12,525 ஊரகப் பகுதிகளில் 2,344 முகாம்  நடத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், ஒரு ஆண்டில் மட்டும் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சாதனை படைத்துள்ளது திமுக அரசு. மேலும் திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு. மக்களின் அரசு என்பதற்கு இத்திட்டமே சான்று என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!

news

தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை

news

வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்

news

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

news

நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்

news

துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்

news

வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

news

பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்

news

Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்