சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
திமுக ஆட்சி பொறுப்பேற்றிலிருந்து மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், உடனுக்குடன் பரிசீலனைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 24 மாவட்டங்களில் உள்ள, 184 தாலுகாக்கள் தேர்வு செய்யப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. அதேபோல் நகர உள்ளாட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு புகார்கள் மீதான மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு 9.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல் பட்டா மாறுதல் உட்பட 15 துறைகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒருங்கிணைந்து 44 அடிப்படை சேவைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 12,525 ஊரகப் பகுதிகளில் 2,344 முகாம் நடத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், ஒரு ஆண்டில் மட்டும் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சாதனை படைத்துள்ளது திமுக அரசு. மேலும் திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு. மக்களின் அரசு என்பதற்கு இத்திட்டமே சான்று என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Festive month.. வருடத்தின் கடைசி மாதம்தான்.. ஆனால் அடுத்த ஆண்டின் வெற்றிக்கான வழிகாட்டி!
சிக்கன்நெக் பகுதியில் செக் வைத்த இந்தியா.. வங்கதேசத்தின் வியூகத்திற்கு பதிலடி!
வெயிட்டான 8 டிப்ஸ்.. சற்று பழகித்தான் பாருங்களேன்.. நீங்களே ஆச்சரியப்படுவீங்க!
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
ஆல் பாஸ்.. ஒரு ஃபீல் குட் மூவி.. பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி, சசிக்குமார்
பிரண்டை துவையல்.. டேஸ்ட்டானது.. உடம்புக்கு ரொம்ப பூஸ்ட்டானதும் கூட!
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
{{comments.comment}}