மக்களுடன் முதல்வர்திட்டம் .. ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு..அசத்திய தமிழ்நாடு அரசு!

Jan 20, 2025,07:07 PM IST

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு.


திமுக ஆட்சி பொறுப்பேற்றிலிருந்து மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், உடனுக்குடன் பரிசீலனைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.




இத்திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 24 மாவட்டங்களில் உள்ள, 184 தாலுகாக்கள் தேர்வு செய்யப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. அதேபோல் நகர உள்ளாட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு புகார்கள் மீதான மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 


முதல் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு 9.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல் பட்டா மாறுதல் உட்பட 15 துறைகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒருங்கிணைந்து 44 அடிப்படை சேவைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 12,525 ஊரகப் பகுதிகளில் 2,344 முகாம்  நடத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், ஒரு ஆண்டில் மட்டும் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சாதனை படைத்துள்ளது திமுக அரசு. மேலும் திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு. மக்களின் அரசு என்பதற்கு இத்திட்டமே சான்று என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

news

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்

news

Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

news

ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

news

தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு

news

வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!

news

வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!

news

சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்