மக்களுடன் முதல்வர்திட்டம் .. ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு..அசத்திய தமிழ்நாடு அரசு!

Jan 20, 2025,07:07 PM IST

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு அரசு.


திமுக ஆட்சி பொறுப்பேற்றிலிருந்து மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், உடனுக்குடன் பரிசீலனைக்கப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.




இத்திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 24 மாவட்டங்களில் உள்ள, 184 தாலுகாக்கள் தேர்வு செய்யப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடம் இருந்து பெற்ற மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. அதேபோல் நகர உள்ளாட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு புகார்கள் மீதான மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 


முதல் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு 9.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல் பட்டா மாறுதல் உட்பட 15 துறைகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒருங்கிணைந்து 44 அடிப்படை சேவைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 12,525 ஊரகப் பகுதிகளில் 2,344 முகாம்  நடத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், ஒரு ஆண்டில் மட்டும் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சாதனை படைத்துள்ளது திமுக அரசு. மேலும் திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு. மக்களின் அரசு என்பதற்கு இத்திட்டமே சான்று என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம

news

நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி

news

மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!

news

தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

news

சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!

news

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?

news

வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!

news

பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு

news

ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்