பார் போற்றும் பாவேந்தர்..!

Apr 22, 2026,11:23 AM IST

- சிவ. ஆ. மலர்விழி ராஜா, சீர்காழி


பார் போற்றும் பாவேந்தர் ... 

கவி அமுதை பருகிடுவோம்.... ! 


கவி நடையில் காதல் மொழி கனிந்திடவே.... 

கருத்தை தந்து கனவுகளை கவியில் வைத்து .. ...


கார்மேக புலவனாக புவனம் போற்ற வாழுகின்றார்..... ! 


தமிழுக்கு அமுதமென்ற

புகழ் கொடுத்து.....


அழகாக

தமிழமுதை பருகிடவே..... 


ஆனந்த கவி


படைத்து..... ! 


விண்ணுக்கும் மண்ணுக்கும் பெருமை சேர்த்து ......




செம்மொழியில்..... 


எண்ணங்களை எடுத்துரைத்து......! 


சித்திர சோலைதனில்.,....


வீரர்கள் சிந்திய 

செந்நீரின்..... 


பெருமைதனை

போற்றி..... 


செங்கதிர் விளைந்த

தேசத்தில்..... 


 நெற்றி வியர்வை சிந்தும்....


உழைப்பினை புகழ்ந்து...... ! 


குயில் கூவும் கானமும்.... 


மயிலாடும்  நடனமும்....... 


கிளி பேசும் மொழிகளும்..... 


பூக்கள்  மலரும் வேளையில்..... 


ஈக்கள்  எடுக்கும் தேனென ......


இன்ப கவி பிறக்கும் கருவாகி..... ! 


சஞ்சீவி மலை     சாரலில்...... 


பர்வத மலையின்

அழகினில்......


கண்ணுக்குள் காட்சி தந்து...... 


காதல் மழையில் குளிரவைத்தார்...... ! 


பாவேந்தர் புகழ் பாடிடுவோம்...... 


பாடல் சுவை அருந்தி

போற்றிடுவோம்..... 


(இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்.. சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்