- சிவ.ஆ.மலர்விழி ராஜா
வாழ்க்கை ஒரு நாடக மேடை...........
நடிப்பது கூட நாணயம் போலே.........!
"நா" நயமே இல்லையெனில்.....
வாழ்க்கை நிலை மாறி சென்றிடுமே........
உறவுகளும் நட்புகளும் நமை பார்த்து ....
நகைத்திடுமே.......!
வரவுக்குள் செலவை வைத்து.....
வரவதினில் சிறிது சேர்த்து......

வருங்காலம் மனதில் வைத்தால்.....
வைரம் போல் மின்னிடலாம்.....!
அடுத்த வீட்டு பெண்களுமே.....
அலங்கார சிலை போல அடுக்கடுக்காய்....
நகை போட்டு......!
வாழ்கின்ற நிலை பார்த்து.....
அவசரத்தில் கடன் பெற்று.....
ஆடம்பர பொருள் சேர்த்து....
ஆனந்தமாய் வாழ்வதெங்கே.....?
வாழும் நிலை மாறி விடும்.....
நித்திரையும் கெட்டு விடும்......!
பொதுவெளியில் செல்வதற்கும் பயம்....
பூதம் போல் தொடர்ந்து வரும்....!
ஏனென்று தெரியாமல் பிள்ளைகளும்....
ஏங்கி விடும்....!
வாழும் வழி தெரியாமல் மதி கூட....
மயங்கி விழும்.....
உயிர்கள் கூட சில நேரம் கடனை போல
கசந்து விடும்....!
கடன் பட்ட நெஞ்சத்தால் தலைக்குனிவு......
தானே வரும்....!!
(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}