- சிவ.ஆ.மலர்விழி ராஜா
வாழ்க்கை ஒரு நாடக மேடை...........
நடிப்பது கூட நாணயம் போலே.........!
"நா" நயமே இல்லையெனில்.....
வாழ்க்கை நிலை மாறி சென்றிடுமே........
உறவுகளும் நட்புகளும் நமை பார்த்து ....
நகைத்திடுமே.......!
வரவுக்குள் செலவை வைத்து.....
வரவதினில் சிறிது சேர்த்து......

வருங்காலம் மனதில் வைத்தால்.....
வைரம் போல் மின்னிடலாம்.....!
அடுத்த வீட்டு பெண்களுமே.....
அலங்கார சிலை போல அடுக்கடுக்காய்....
நகை போட்டு......!
வாழ்கின்ற நிலை பார்த்து.....
அவசரத்தில் கடன் பெற்று.....
ஆடம்பர பொருள் சேர்த்து....
ஆனந்தமாய் வாழ்வதெங்கே.....?
வாழும் நிலை மாறி விடும்.....
நித்திரையும் கெட்டு விடும்......!
பொதுவெளியில் செல்வதற்கும் பயம்....
பூதம் போல் தொடர்ந்து வரும்....!
ஏனென்று தெரியாமல் பிள்ளைகளும்....
ஏங்கி விடும்....!
வாழும் வழி தெரியாமல் மதி கூட....
மயங்கி விழும்.....
உயிர்கள் கூட சில நேரம் கடனை போல
கசந்து விடும்....!
கடன் பட்ட நெஞ்சத்தால் தலைக்குனிவு......
தானே வரும்....!!
(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!
Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!
Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!
Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
{{comments.comment}}