கடன் -தலைக்குனிவு

Nov 10, 2025,02:34 PM IST

- சிவ.ஆ.மலர்விழி ராஜா


வாழ்க்கை ஒரு நாடக மேடை...........

நடிப்பது கூட நாணயம் போலே.........!

"நா" நயமே இல்லையெனில்.....

வாழ்க்கை நிலை மாறி சென்றிடுமே........

உறவுகளும் நட்புகளும் நமை பார்த்து ....

நகைத்திடுமே.......!

வரவுக்குள் செலவை வைத்து.....

வரவதினில் சிறிது சேர்த்து......




வருங்காலம் மனதில் வைத்தால்.....

வைரம் போல் மின்னிடலாம்.....!

அடுத்த வீட்டு பெண்களுமே.....

அலங்கார சிலை போல அடுக்கடுக்காய்....

நகை போட்டு......!

வாழ்கின்ற நிலை பார்த்து.....

அவசரத்தில் கடன் பெற்று.....

ஆடம்பர பொருள் சேர்த்து....

ஆனந்தமாய் வாழ்வதெங்கே.....?

வாழும் நிலை மாறி விடும்.....

நித்திரையும் கெட்டு விடும்......!

பொதுவெளியில் செல்வதற்கும்  பயம்....

பூதம் போல் தொடர்ந்து வரும்....!


ஏனென்று தெரியாமல் பிள்ளைகளும்....

ஏங்கி விடும்....!

வாழும் வழி தெரியாமல் மதி கூட....

மயங்கி விழும்.....

உயிர்கள் கூட சில நேரம்  கடனை போல

கசந்து விடும்....!


கடன் பட்ட நெஞ்சத்தால் தலைக்குனிவு......

தானே வரும்....!!


(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முகத்தில் முகம் பார்க்கலாம்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்