அன்பே சாய்

Apr 16, 2026,02:56 PM IST

- சிவ. ஆ. மலர்விழி ராஜா


முழு மதியில் முகம் அருளும் சாயி நாதா..... 


உயிர் மூச்செனவே நீயானாய் சற்குரு

தேவா.....


முழு மதியில் முகம் அருளும்

சாயி நாதா.....  


உயிர்  மூச்செனவே

நீயானாய் சற்குரு 

தேவா.....! 


சாயி நாதா சற்குரு தேவா...... 


சாயி நாதா சற்குரு தேவா...... 


வள்ளலாகி வரம் அருளும் சாயி நாதா...... 


வறுமை வாழ்வில் 

ஒளியாய்  வந்த என் குரு தேவா...... 


வள்ளலாகி வரம் அருளும் சாயி நாதா...... 




வறுமை வாழ்வில்

ஒளியாய் வந்த என்

குரு தேவா.....! 


சாயி நாதா......

என் குரு தேவா,......


சாயி நாதா......

என் குரு நாதா.....!


சாவடியின் ஊர்வலத்தில் சற்குரு

சாயி..... 


சாவடியின் ஊர்வலத்தில் சற்குரு சாயி......! 


சந்தனத்தின் மணம்

அருளும் ஜெய ஜெய சாயி...... 


சாவடியின் ஊர்வலத்தில் சற்குரு சாயி..... 


சந்தனத்தின் மணம் அருளும் ஜெய ஜெய சாயி...... 


சற்குரு சாயி..... 

ஜெய ஜெய சாயி...... 


சற்குரு சாயி ......

ஜெய ஜெய சாயி.......! 


நேசக்கரம் தேடி வந்தோம் சற்குரு சாயி...... 


உனது பாசம் எனும் அன்பை கண்டோம்

ஜெய ஜெய சாயி...... 


உதியில் உயிரை மீட்டு

தரும் சற்குரு சாயி..... 


உந்தன் பாசம் எனும் அன்பை தந்தாய் 

துவாரகமாயி....... 


உதியில்  உயிரை மீட்டு

தரும் சற்குரு சாயி..... 


உந்தன்  பாசம் எனும் அன்பை தந்தாய்

துவாரகமாயி....... ! 


சற்குரு சாயி...,... 

துவாரகமாயி......... 


சற்குரு சாயி..... 

துவாரகமாயி......! 


சந்நிதியில் தவம் கிடந்தோம் சாயி நாதா...... 


சகல துன்பம் நீக்கியருள் ஜெய ஜெய தேவா..... 


சந்நிதியில் தவம் கிடந்தோம் சாயி  நாதா....... 


சகல துன்பம் நீங்கியருள்  ஜெய ஜெய 

தேவா....! 


சாயி நாதா எங்கள் சற்குரு தேவா........ 


சாயி நாதா எங்கள்

சற்குரு தேவா.....! 


துவாரகமாயி..... 

ஜெய ஜெய சாயி......! 


ஜெய ஜெய சாயி.....!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்