கொச்சி : கடும் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் வயநாடு பகுதி மக்களுக்கு உதவும் வகையில் ரூ.3 கோடி நன்கொடை வழங்குவதாக மலையாள நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார். வயநாட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்ட பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜூலை 30ம் தேதி கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுண்டக்கை, சூரன்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் வாழ்ந்த நூற்றக்கணக்கான மக்கள் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர். இதுவரை 364 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து 5வது நாளாக மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் மண்ணிற்குள் புதைந்துள்ளதாக சொல்லப்படும் 250க்கும் அதிகமானவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
நிலச்சரிவு நடைபெற்ற வயநாட்டிற்கு இன்ற நேரில் சென்று பார்த்த நடிகர் மோகன்லால், வயநாடு புனரமைப்பு பணிகளுக்காக விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக ரூ.3 கோடி வழங்கப்படும் என அறிவித்தார். இதுவரை இப்படி ஒரு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதே இல்லை எனவும் மோகன்லால் வேதனை தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால், விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலமாக ஆரம்ப கட்ட புனரமைப்பு பணிகளுக்காக ரூ.3 கோடியை நாங்கள் வழங்குகிறோம். தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் நன்கொடை வழங்க தயாராக உள்ளோம். இந்தியாவில் இது போன்ற மோசமான பேரிடரை இதுவரை சந்தித்தது கிடையாது. இழந்ததை மீண்டும் கொண்டு வர முடியாது. அதனால் இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனி எப்படி உதவலாம் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்.
கொட்டும் மழை, இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றி. ஏராளமான மண் உள்ளது. இன்னும் மண்ணிற்குள் இருப்பவர்கள் உயிருடன் இருப்பார்கள் என உறுதியாக சொல்ல முடியாது. எத்தனை அடி ஆழத்திற்கு மண் புதைந்துள்ளது என்பது தெரியவில்லை என்றார்.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சூரன்மலை, முண்டகை கிராமங்களுக்கு சென்று பார்வையிட்ட மோகன்லால், அங்கு பாதிக்கப்பட்ட மக்களையும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரையும் சந்தித்து பேசினார். நடிகர் மோகன்லால் இந்தியா பிராந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கெ்ானலாகவும் இருந்து வருகிறார். ராணுவ உடையில் சென்று அவர் மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}