"கார்கேதான் பிரதமர் வேட்பாளர்".. பஞ்சாயத்தைத் தொடங்கி வைத்த மமதா.. அவர் பதில் சூப்பர்!

Dec 20, 2023,08:18 AM IST

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிப்பதே நமது முதல் இலக்காக இருக்க வேண்டும். பிறகுதான் பிரதமர் வேட்பாளர் குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்வரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிலளித்துள்ளார்.


இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே பெயரைப் பரிந்துரைத்தனர். நாட்டின் முதல் தலித் பிரதமராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


ஆனால் கூட்டத்தில் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்க்படவில்லை. ஆனால் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, முதலில் நாம் வெல்வது குறித்து இலக்காக தீர்மானித்து செயல்படுவோம். பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய நமக்கு அவகாசம் இருக்கிறது. தேர்தலில் வெல்வதும், நமது பலத்தை அதிகரிப்பதும்தான் இப்போதைய முக்கிய திட்டமாக இருக்க வேண்டும் என்று கார்கே பதிலளித்துள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.




கார்கே மேலும் பேசும்போது, நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.  நமது வெற்றி மட்டுமே எனது நோக்கமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் நமது கூட்டணி பெரும்பான்மை பலத்தைப் பெற வேண்டும். பிறகு ஜனநாயக முறைப்படி பிரதமரை எம்.பிக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றார் கார்கே.


கூட்டத்திற்குப் பிறகு கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் பிரதமர் மோடி மிகவும் முரட்டுத்தனமாக செயல்பட ஆரம்பித்துள்ளார். எந்த அதிகாரமும் நிரந்தரம் கிடையாது என்றார் காட்டமாக.


இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கூட்டணிக் கட்சிகள் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவாக உள்ளன. அதேசமயம், மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காங்கிரஸுக்கு எதிரான மன நிலையில்தான் ஆரம்பத்திலிருந்தே உள்ளனர். குறிப்பாக ராகுல் காந்தி பிரதமர் ஆவதை அவர்கள் விரும்பவில்லை. கூட்டணி இல்லாமல் பாஜகவை சமாளிப்பது கடினம் என்பதால்தான் அரை மனதுடன் இந்தியா கூட்டணியில் நீடித்து வருகின்றனர். இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கே பெயரை அவர்கள் கையில் எடுத்திருப்பது எந்த நோக்கத்தில் என்று தெரியவில்லை.


ஆனால் கூட்டணிதான் முக்கியம், கூட்டணியின் தலைவர், பிரதமர் வேட்பாளர் என யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்.. காங்கிரஸுக்குப் பிரச்சினையே இல்லை என்று ஆரம்பத்திலேயே ராகுல் காந்தி தெளிவாக சொல்லி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்