டெல்லி: சமீபத்தில்தான் பேட்டை தலைகீழாக பிடித்து கிரிக்கெட் ஆடி காஷ்மீரை நடுங்க வைத்தார் சச்சின் டெண்டுல்கர். இப்போது இன்னொரு நபர், விளக்குமாற்றை எடுத்து அதன் கைப்பிடியால் பேட்மிண்டன் ஆடி கலங்கடித்துள்ளார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்.. எதை வைத்து விளையாடுகிறோம் என்பது முக்கியம் அல்ல.. எப்படி விளையாடுகிறோம் என்பதே கவனிக்கப்பட வேண்டியது என்பதையே இந்த இரு சம்பவங்களும் நிரூபித்துள்ளன.
ஜதின் சர்மா என்பவர் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு ஆணும், பெண்ணும் பேட்மிண்டன் ஆடிக் கொண்டுள்ளனர். அப்போது ஒருவர் விளக்குமாற்றுடன் (துடைப்பம்) உள்ளே நுழைகிறார். அப்படியே கோர்ட்டை பெருக்கியபடி அவர் வருகிறார். அவரைப் பார்த்த அந்தப் பெண், விளையாடுகிறோம்ல.. அந்தப் பக்கம் போங்க என்று சொல்கிறார்.

அதைப் பார்த்த அந்த நபர் இருங்க இருங்க நாங்களும் விளையாடுவோம்ல என்று கூறி, துடைப்பத்தையே பேட் போல மாற்றி நீங்க போடுங்க பாஸ் என்று எதிர்முனையில் இருக்கும் வீரரிடம் கூறுகிறார். அந்த வீரரும் விளையாட ஆரம்பிக்கிறார். அவர் பேட்மிண்டன் ராக்கெட்டால் விளையாட, நம்மாளு துடைப்பத்தையே பேட் போல மாற்றி விளையாடுகிறார்.
இருவரும் மாறி மாறி சரமாரியாக அடித்து ஆட ஆட்டம் களை கட்டுகிறது. துடைப்பத்தின் கைப்பிடியால் பந்தை லாவகமாக அடித்து ஆடி அட்டகாசம் செய்கிறார் நம்மவர். அப்படியே ஒரு புள்ளியும் எடுத்து மிரட்டி விட்டார்.
இந்த வீடியோ சூப்பர் வைரலாகியுள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்கள் குவிந்துள்ளன. 2 லட்சம் லைக்குகள் விழுந்துள்ளன.
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}