டெல்லி: சமீபத்தில்தான் பேட்டை தலைகீழாக பிடித்து கிரிக்கெட் ஆடி காஷ்மீரை நடுங்க வைத்தார் சச்சின் டெண்டுல்கர். இப்போது இன்னொரு நபர், விளக்குமாற்றை எடுத்து அதன் கைப்பிடியால் பேட்மிண்டன் ஆடி கலங்கடித்துள்ளார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள்.. எதை வைத்து விளையாடுகிறோம் என்பது முக்கியம் அல்ல.. எப்படி விளையாடுகிறோம் என்பதே கவனிக்கப்பட வேண்டியது என்பதையே இந்த இரு சம்பவங்களும் நிரூபித்துள்ளன.
ஜதின் சர்மா என்பவர் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு ஆணும், பெண்ணும் பேட்மிண்டன் ஆடிக் கொண்டுள்ளனர். அப்போது ஒருவர் விளக்குமாற்றுடன் (துடைப்பம்) உள்ளே நுழைகிறார். அப்படியே கோர்ட்டை பெருக்கியபடி அவர் வருகிறார். அவரைப் பார்த்த அந்தப் பெண், விளையாடுகிறோம்ல.. அந்தப் பக்கம் போங்க என்று சொல்கிறார்.

அதைப் பார்த்த அந்த நபர் இருங்க இருங்க நாங்களும் விளையாடுவோம்ல என்று கூறி, துடைப்பத்தையே பேட் போல மாற்றி நீங்க போடுங்க பாஸ் என்று எதிர்முனையில் இருக்கும் வீரரிடம் கூறுகிறார். அந்த வீரரும் விளையாட ஆரம்பிக்கிறார். அவர் பேட்மிண்டன் ராக்கெட்டால் விளையாட, நம்மாளு துடைப்பத்தையே பேட் போல மாற்றி விளையாடுகிறார்.
இருவரும் மாறி மாறி சரமாரியாக அடித்து ஆட ஆட்டம் களை கட்டுகிறது. துடைப்பத்தின் கைப்பிடியால் பந்தை லாவகமாக அடித்து ஆடி அட்டகாசம் செய்கிறார் நம்மவர். அப்படியே ஒரு புள்ளியும் எடுத்து மிரட்டி விட்டார்.
இந்த வீடியோ சூப்பர் வைரலாகியுள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்கள் குவிந்துள்ளன. 2 லட்சம் லைக்குகள் விழுந்துள்ளன.
கல்விக் கடன் ரத்து, இலவச கேஸ் சிலிண்டர்.. மேலும் 5 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக
ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீதி அழுகிறது.. சுப்ரீம் கோர்ட்டில் புதிய வரலாறு படைத்த மமதா பானர்ஜி!
சிப்ஸ் மெஷின் ஓகே... அது என்ன உள்ளாடை மெஷின்? டெல்லி மெட்ரோவின் 'புது முயற்சி' வைரல்!
தகுதியான தமிழ்த் திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.. விசிக கவலை
மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.5,040 உயர்வு!
லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபி மகனுக்கு நேர்ந்த கதி.. பரபரப்பில் திரிபோலி!
எங்கள் கனவுகளைக் கேளுங்கள்.. செங்கல்பட்டு மாணவர்களின் அழகிய கவிதைகள்!
இல்லைன்னு சொல்லாதீங்க.. தெரிஞ்சுக்க முயலுங்க.. No God, no peace.. Know God, know peace!
{{comments.comment}}