சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் திரையரங்கில் பயங்கரமான அனுபவம் கொடுத்த படம். சினிமாவை ஒரு மாயாஜாலத்தோடு இணைந்த படம் மிகச்சிறப்பாக படத்தை எடுத்துள்ளார் என்று இயக்குநர் கவுதம் மேனன் பாராட்டியுள்ளார்.
மலையாளத்தில் ஹிட் அடித்த ஜன்-இ-மேன் திரைப்படத்தை இயக்கிய சிதம்பரம் எஸ்.பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்., 22ல் வெளியான படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் 2006ம் ஆண்டு கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நண்பர்களில் ஒருவர் குணா குகையில் கால் தவறி கீழே விழுந்து விடுகிறார். அவரை மீட்க உடன் வந்த நண்பர்கள் படும் போராட்டம் தான் தற்போது வெளிவந்துள்ள மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் கதையாகும். இது ஒரு உண்மைச் சம்பவம் ஆகும்.
இப்படத்தில் சவ்பின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், கணபதி எஸ் பொதுவால், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், ஜீன் பால் லால் என மலையாள சினிமாவின் இளம் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். மலையாளத்தில் வெளியாகி உலகம் முழுவதிலும் சுமார் 100 கோடிக்கு வசூல் படைத்துள்ளது மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்திற்கு தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தைப் பார்த்த இயக்குநர் கவுதம் மேனன் இப்படத்தை பாராட்டியுள்ளார். அதில், திரையரங்கில் பயங்கரமான அனுபவம் கொடுத்த படம். சினிமாவை ஒரு மாயாஜாலத்தோடு இணைத்த படம். மிகச் சிறப்பாக படத்தை எடுத்துள்ளனர். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற பாடல் வந்தபோது நான் முதல் முதலில் குணா படம் பார்த்தது என் நினைவுக்கு வந்தது எனக் கூறியுள்ளார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}