சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
லியோ படத்தில் தன்னுடன் நடித்த நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபிக்கு கோரியது தேசிய மகளிர் ஆணையம்.
இதையடுத்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பதற்கு பதில் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று தவறுதலாக குறிப்பிட்டதால் ஜாமீன் மனுவை திரும்ப பெற்று பின்னர் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு குறித்த விசாரணை நீதிபதி அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து, திரிஷாவிற்கு எதிராக மன்சூர் அலிகான் உள்நோக்கத்துடன் பேசவில்லை. திரிஷா தரப்பில் இருந்தும் எந்த புகாரும் தரப்படவில்லை. தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு மன்சூர் அலிகான் கட்டுப்படுவார் என்று கூறி முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, உத்தரவை ஒத்திவைத்திருந்தார். தற்போது மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். போலீஸ் தரப்பில் விசாரணை நடந்து வருவதாக கூறியதைப் பதிவு செய்து கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி.
முன்னதாக திரிஷா குறித்துப் பேசிய பேச்சுக்காக அவர் திரிஷாவிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டார் மன்சூர் அலிகான் என்பது நினைவிருக்கலாம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}