"டிஸ்மிஸ்".. நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு .. சென்னை செஷன்ஸ் கோர்ட் அதிரடி உத்தரவு!

Nov 24, 2023,06:34 PM IST

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.


லியோ படத்தில் தன்னுடன் நடித்த நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபிக்கு கோரியது தேசிய மகளிர் ஆணையம். 


இதையடுத்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஆயிரம் விளக்கு  அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பதற்கு  பதில் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று தவறுதலாக குறிப்பிட்டதால் ஜாமீன் மனுவை திரும்ப பெற்று பின்னர் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.




இந்த மனு குறித்த விசாரணை நீதிபதி அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு  வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து, திரிஷாவிற்கு எதிராக மன்சூர் அலிகான் உள்நோக்கத்துடன் பேசவில்லை. திரிஷா தரப்பில் இருந்தும் எந்த புகாரும் தரப்படவில்லை. தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. 


மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு மன்சூர் அலிகான் கட்டுப்படுவார் என்று கூறி முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, உத்தரவை ஒத்திவைத்திருந்தார். தற்போது மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். போலீஸ் தரப்பில் விசாரணை நடந்து வருவதாக கூறியதைப் பதிவு செய்து கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி.


முன்னதாக திரிஷா குறித்துப் பேசிய பேச்சுக்காக அவர் திரிஷாவிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டார் மன்சூர் அலிகான் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்