சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
லியோ படத்தில் தன்னுடன் நடித்த நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபிக்கு கோரியது தேசிய மகளிர் ஆணையம்.
இதையடுத்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பதற்கு பதில் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று தவறுதலாக குறிப்பிட்டதால் ஜாமீன் மனுவை திரும்ப பெற்று பின்னர் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு குறித்த விசாரணை நீதிபதி அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் இருந்து, திரிஷாவிற்கு எதிராக மன்சூர் அலிகான் உள்நோக்கத்துடன் பேசவில்லை. திரிஷா தரப்பில் இருந்தும் எந்த புகாரும் தரப்படவில்லை. தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு மன்சூர் அலிகான் கட்டுப்படுவார் என்று கூறி முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, உத்தரவை ஒத்திவைத்திருந்தார். தற்போது மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். போலீஸ் தரப்பில் விசாரணை நடந்து வருவதாக கூறியதைப் பதிவு செய்து கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி.
முன்னதாக திரிஷா குறித்துப் பேசிய பேச்சுக்காக அவர் திரிஷாவிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்டு அறிக்கை விட்டார் மன்சூர் அலிகான் என்பது நினைவிருக்கலாம்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}