சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நடிகரான மன்சூர் அலிகான் சமீபத்தில் தனது இயக்கத்தை இந்திய ஜனநாயக புலிகள் கட்சியாக மாற்றி அமைத்தார். அதாவது தேசிய அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். இதன் முதல் கூட்டம் கடந்த மாதம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. மேலும் தனது கட்சியை முதன்மையான கூட்டணி கட்சிகளுடன் இணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மறைமுகமாக கோரிக்கை விடுத்தும் வந்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தொடர்ந்து பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் தங்கள் கட்சிகளை இணைத்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பக்கம் பாமக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அது தோல்வியடைந்ததை அடுத்து அதிமுக ஏமாற்றத்தில் உள்ளது. தேமுதிகவும் சரிப்பட்டு வரவில்லை இதுவரை.

இதனால் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினர் சாதகமான முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வந்தார். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று பேசினர் அதிமுக தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவினர். இந்தக் குழுவில், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது அதிமுகவுக்கு ஆதரவு தருவதாகவும், ஒரு சீட் கொடுத்தால் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்யத் தயாராக இருப்பதாகவும் மன்சூர் அலிகான் கூறினாராம். இதை புன்சிரிப்புடன் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டுக் கொண்டாராம். கடந்த லோக்சபா தேர்தலில் திண்டுக்கலில்தான் மன்சூர் அலிகான் போட்டியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
வலுவான கூட்டணிக்காக காத்திருக்கும் அதிமுகவுக்கு, மன்சூர் அலிகானின் வருகை உற்சாகம் தந்திருப்பதாக கருதப்படுகிறது. கவர்ச்சிகரமான ஒரு பிரச்சார பீரங்கியாக மன்சூர் அலிகான் செயல்படவும் வாய்ப்புள்ளதால் அதிமுக தரப்பு உற்சாகமடைந்துள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}