நம் முன்னோர்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட வேண்டும் என்றும், அதற்கான முக்கியத்துவத்தையும் வகுத்து வைத்தார்கள். ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு, கார்த்திகையில் சிவன், முருகன், ஐயப்பன் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு என வைத்தார்கள். ஆனால் மார்கழியில் மட்டும் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்வது நன்மையை தரும் என வைத்தார்கள்.
மார்கழி மாத வழிபாடு :

மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து, வாசலில் கோலமிட வேண்டும் என்ற முறையையும் வகுத்தார்கள். மற்ற எந்த மாதத்திலும் இல்லாமல் அதிகாலையில் எழுந்து கோலமிடுவது மார்கழி மாதத்தின் தனிச்சிறப்பாக சொல்லப்பட்டது. இதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு. அறிவியல் ரீதியாக, மார்கழி மாதத்தின் அதிகாலை வேளையில், ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் வருவதாக சொல்லப்படுகிறது. இந்த ஓசோன் படத்தில் இருந்து வரும் காற்று பூமியில் அதிகம் நிறைந்திருக்கும். இந்த காற்றினை நாம் சுவாசிக்கும் போது நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோமிட வேண்டும். சாணம் நகரங்களில் கிடைப்பது அரிது. எனவே தண்ணீர் தெளித்து கோமிடுவது நம் உடலுக்கும், மனதிற்கும் அதீத நன்மை பயக்கும்.
நம் உடலில் 80 சதவீதம் ஆக்ஸிஜன், 20 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு வாயும் இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய வாழ்க்கை மாற்றத்தால் பழக்க வழக்கங்களின் தவறுகளால் கூடுதலாகி விட்ட கார்பன் டை ஆக்சைடை விரட்டி ஆக்ஸிஜனை நம் உடல் பெறுவதால் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகும். இதனால் நம்முடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால் தான் இந்த வாயுவை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
சாதாரணமாக சொன்னால் நம் மக்கள் கடைபிடிப்பது கடினம். எனவே தெய்வத்தின் பெயரால் செய்ய வேண்டும் என்று கூறினால் தான் நாம் அதனை பின்பற்றுவோம் என நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்
தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?
விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?
{{comments.comment}}