- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 2 :
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.

பொருள் :
சூரிய பகவானின் தேரோட்டியான அருணன் கிழக்கிற்கு வந்து விட்டான். உன்னுடைய முகத்தில் இருக்கும் கருணை ஒளியை போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து தன்னுடைய கதிர்களை விரித்து இருளை நீக்கி விட்டான். உன்னுடைய கண் மலர்களை போல் தாமரை குளத்தில் மலர்கள் மலர்ந்து விட்டன. வண்டு இனங்களில் அவற்றில் தேன் குடிக்க கூட்டமாக திரண்டு வந்து கொண்டிருக்கின்றன. திருப்பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் எங்கள் சிவ பெருமானே! அருளாகி செல்வத்தை வாரி வழங்குவதற்காக ஆனந்த மலை போலவும், அலை வீசும் கடலை போல் அருளை ஓயாமல் வழங்கிக் கொண்டிருப்பவனே கண் விழிப்பாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
தொடர்ந்து 4வது நாளாக சரிந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,120 குறைவு!
தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா.. 2026ல் வரிசையாக களை கட்டப் போகும் சட்டசபைத் தேர்தல்கள்
இது தியாகம்.. டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தீவிரவாதி டாக்டர் உமர் பரபரப்பு வீடியோ
கார்த்திகை மாத சிவராத்திரி.. நாளை கார்த்திகை அமாவாசை.. அடுத்தடுத்து சிறப்பு!
சபரிமலை பக்தர்களே.. மூளை தின்னும் அமீபா அச்சுறுத்தல்.. இதைக் கடைப்பிடிங்க போதும்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 18, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
{{comments.comment}}