- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 2 :
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.

பொருள் :
சூரிய பகவானின் தேரோட்டியான அருணன் கிழக்கிற்கு வந்து விட்டான். உன்னுடைய முகத்தில் இருக்கும் கருணை ஒளியை போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து தன்னுடைய கதிர்களை விரித்து இருளை நீக்கி விட்டான். உன்னுடைய கண் மலர்களை போல் தாமரை குளத்தில் மலர்கள் மலர்ந்து விட்டன. வண்டு இனங்களில் அவற்றில் தேன் குடிக்க கூட்டமாக திரண்டு வந்து கொண்டிருக்கின்றன. திருப்பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் எங்கள் சிவ பெருமானே! அருளாகி செல்வத்தை வாரி வழங்குவதற்காக ஆனந்த மலை போலவும், அலை வீசும் கடலை போல் அருளை ஓயாமல் வழங்கிக் கொண்டிருப்பவனே கண் விழிப்பாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 23, 2025... இன்று சுற்றி இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும
மார்கழி 08ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 08 வரிகள்
அழகிய பாதமே.. A letter to my feet!
அன்பெனும் பெருமழை!
வி..யில் தொடங்கும் தொகுதியில் போட்டியிடுவாரா விஜய்??.. பரபரக்கும் புதிய தகவல்!
பெங்களூருவின் அழகிய கலைப் பொக்கிஷம்.. பனசங்கரி சிற்பப் பூங்கா
புத்தம் புது பூமி!
தகவல் தொழில்நுட்பம் – வரமா, சாபமா?.. கையில் இருப்பது வெடிகுண்டா அல்லது வெறும் குண்டா!
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
{{comments.comment}}