- ஸ்வர்ணலட்சுமி
திருப்பள்ளியெழுச்சி பாடல் 2 :
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.

பொருள் :
சூரிய பகவானின் தேரோட்டியான அருணன் கிழக்கிற்கு வந்து விட்டான். உன்னுடைய முகத்தில் இருக்கும் கருணை ஒளியை போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து தன்னுடைய கதிர்களை விரித்து இருளை நீக்கி விட்டான். உன்னுடைய கண் மலர்களை போல் தாமரை குளத்தில் மலர்கள் மலர்ந்து விட்டன. வண்டு இனங்களில் அவற்றில் தேன் குடிக்க கூட்டமாக திரண்டு வந்து கொண்டிருக்கின்றன. திருப்பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் எங்கள் சிவ பெருமானே! அருளாகி செல்வத்தை வாரி வழங்குவதற்காக ஆனந்த மலை போலவும், அலை வீசும் கடலை போல் அருளை ஓயாமல் வழங்கிக் கொண்டிருப்பவனே கண் விழிப்பாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}