மார்கழி 22 திருப்பள்ளியெழுச்சி பாடல் 2 : அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

Jan 05, 2025,04:01 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருப்பள்ளியெழுச்சி பாடல் 2 :


அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

 அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழவெழ நயனக்

 கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்

 திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே

 அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.




பொருள் :


சூரிய பகவானின் தேரோட்டியான அருணன் கிழக்கிற்கு வந்து விட்டான். உன்னுடைய முகத்தில் இருக்கும் கருணை ஒளியை போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து தன்னுடைய கதிர்களை விரித்து இருளை நீக்கி விட்டான். உன்னுடைய கண் மலர்களை போல் தாமரை குளத்தில் மலர்கள் மலர்ந்து விட்டன. வண்டு இனங்களில் அவற்றில் தேன் குடிக்க கூட்டமாக திரண்டு வந்து கொண்டிருக்கின்றன. திருப்பெருந்துறையில் குடி கொண்டிருக்கும் எங்கள் சிவ பெருமானே! அருளாகி செல்வத்தை வாரி வழங்குவதற்காக ஆனந்த மலை போலவும், அலை வீசும் கடலை போல் அருளை ஓயாமல் வழங்கிக் கொண்டிருப்பவனே கண் விழிப்பாயாக.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!

news

தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு...10 பேர் பட்டியலில் செங்கோட்டையன்

news

பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன் படம் ...கூட்டணி தகவல் உண்மை தானா?

news

பாலமேடு ஜல்லிக்கட்டு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை பரிசளித்த நடிகர் சூரி!

news

மாட்டுப் பொங்கலோடு திருவள்ளுவர் தினத்தையும் சேர்த்துக் கொண்டாடுவோம்!

news

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தங்கம் விலை இன்று சற்று குறைவு

news

அடி ஆத்தாடி.. மனதைக் கொள்ளை கொண்ட ஜெனீபர் டீச்சர் .. A rewind!

news

சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

news

தை மகள் பிறந்தாள்

அதிகம் பார்க்கும் செய்திகள்