ஜிஷிஷான்: சீனாவில் நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
சீனாவின் கான்சு மற்றும் குயிங்காய் ஆகிய மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக இருந்தது.
பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மிகப் பெரும் பொருட் சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் மையம் லிகுகோ நகரில் இருந்தது. குயிங்காய் மாகாணம் என்பது, திபெத்திய இமயமலைத் தொடருக்கு அருகே இருக்கும் பகுதியாகும். இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும்.

நள்ளிரவு நிலநடுக்கத்தால் வீடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. சாலைகளிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து ஓடி வெளியில் வந்தனர். பல இடங்களில் மின்சப்ளை பாதிக்கப்பட்டது. குடிநீர் விநியோகமும் தடை பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதுவரை 111 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ரயில் போக்குவரத்தும், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அதிபர் ஸி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்
Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
{{comments.comment}}