ஜிஷிஷான்: சீனாவில் நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
சீனாவின் கான்சு மற்றும் குயிங்காய் ஆகிய மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 ஆக இருந்தது.
பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மிகப் பெரும் பொருட் சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் மையம் லிகுகோ நகரில் இருந்தது. குயிங்காய் மாகாணம் என்பது, திபெத்திய இமயமலைத் தொடருக்கு அருகே இருக்கும் பகுதியாகும். இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும்.
நள்ளிரவு நிலநடுக்கத்தால் வீடுகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. சாலைகளிலும் பிளவு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து ஓடி வெளியில் வந்தனர். பல இடங்களில் மின்சப்ளை பாதிக்கப்பட்டது. குடிநீர் விநியோகமும் தடை பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதுவரை 111 பேர் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ரயில் போக்குவரத்தும், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அதிபர் ஸி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!
கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்
மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!
அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!
அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!
வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி
தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்
{{comments.comment}}