2 வாரமாக.. நீலகிரியில் விடாமல் பெய்யும் கன மழை.. பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

Jul 30, 2024,08:31 AM IST

ஊட்டி: தென் மேற்குப் பருவ மழை சூடு பிடித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக  தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்றும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


கேரளாவிலும், கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாகவே விட்டு விட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியுள்ளன.




பந்தலூர், கூடலூர்,  குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பவ்யா தன்னேரு உத்தரவிட்டுள்ளார்.


இதற்கிடையே, கேரளா, நீலகிரி, வால்பாறை மற்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளான குடகு, ஹசன், சிக்மகளூர் ஆகிய பகுதிகளில் பெரு மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்துதான் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை குறையும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


நீலகிரி மாவட்ட அணைகளுக்கு பெருமளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், தேனி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!

news

தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை

news

வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்

news

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

news

நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்

news

துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்

news

வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

news

பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்

news

Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்