ஊட்டி: தென் மேற்குப் பருவ மழை சூடு பிடித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்றும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கேரளாவிலும், கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாகவே விட்டு விட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
பந்தலூர், கூடலூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பவ்யா தன்னேரு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, கேரளா, நீலகிரி, வால்பாறை மற்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளான குடகு, ஹசன், சிக்மகளூர் ஆகிய பகுதிகளில் பெரு மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்துதான் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை குறையும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட அணைகளுக்கு பெருமளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், தேனி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
22ம் தேதி முருகனை கையில் எடுப்பது போல் 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்: நயினார் நாகேந்திரன்
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு... தமிழ்த் திரையுலகுக்கு புதுத் தெம்பு.. கமல்ஹாசனின் ரியல் Thuglife
கமல்ஹாசனை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்.. தக்லைபுக்கு தடை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி
காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 குறைவு!
சிறுவன் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்
4 ராசிகளில் நீங்களும் ஒருவரா?..2025ல் பெரிய கோடீஸ்வரரா ஆய்ருவீங்களாம்ய்யா..பாபா வங்காவே சொல்லிட்டாரு
{{comments.comment}}