ஊட்டி: தென் மேற்குப் பருவ மழை சூடு பிடித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்றும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கேரளாவிலும், கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாகவே விட்டு விட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

பந்தலூர், கூடலூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பவ்யா தன்னேரு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, கேரளா, நீலகிரி, வால்பாறை மற்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளான குடகு, ஹசன், சிக்மகளூர் ஆகிய பகுதிகளில் பெரு மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்துதான் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை குறையும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட அணைகளுக்கு பெருமளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், தேனி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும் - விஜய் பேச்சு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; விஜய் பதிவு
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.7,600 குறைவு
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்
டி20 உலகக் கோப்பை: இந்தியா உடனான போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்...ஐசிசி அதிரடி அறிக்கை
அன்பு மாணவர்களே!
நீ மழை! (காதல் தொடர்கதை.. அத்தியாயம் 1)
{{comments.comment}}