2 வாரமாக.. நீலகிரியில் விடாமல் பெய்யும் கன மழை.. பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

Jul 30, 2024,08:31 AM IST

ஊட்டி: தென் மேற்குப் பருவ மழை சூடு பிடித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக  தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இன்றும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


கேரளாவிலும், கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாகவே விட்டு விட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியுள்ளன.




பந்தலூர், கூடலூர்,  குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பவ்யா தன்னேரு உத்தரவிட்டுள்ளார்.


இதற்கிடையே, கேரளா, நீலகிரி, வால்பாறை மற்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளான குடகு, ஹசன், சிக்மகளூர் ஆகிய பகுதிகளில் பெரு மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்துதான் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை குறையும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


நீலகிரி மாவட்ட அணைகளுக்கு பெருமளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும், தேனி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி

news

நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?

news

தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த திட்டம்...நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்

news

பாஜக.,வின் உருட்டல்...மிரட்டலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் : முதல்வர் பேச்சு

news

பாகிஸ்தான் புதிய ஏவுகணை சோதனை...எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

news

மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு!

news

பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா

news

தமிழக மீனவர்களின் மீது.. இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்.. மீனவர்கள் போராட்டம்!

news

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

அதிகம் பார்க்கும் செய்திகள்