கவனிக்காத பிள்ளைகள்.. சிலிண்டரை வெடிக்க வைத்த டாக்டர்.. மனைவி பலி.. மயிலாடுதுறையில் கொடுமை

Jan 30, 2025,08:35 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், வயதான தங்களை பிள்ளைகள் சரியாக பார்த்துக் கொள்ளாததால் வேதனை அடைந்த ஹோமியோபதி டாக்டர் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். டாக்டர் உயிருக்குப் போராடி வருகிறார்.

மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹோமியோபதி மருத்துவர் இளங்கோவன். இவருக்கு வயது 69. இவரது மனைவி செந்தாமரை (வயது-59). இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மகன், கீழ் வீட்டில் வசித்து வருகிறார். மேல் வீட்டில் இளங்கோவன் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.



இளங்கோவனுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செந்தாமரை சிறுநீரக கோளாறால்  பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் அவதிப்பட்டுள்ளார். இவர்களது மகன் மற்றும் மகள்கள் யாரும் இவர்களை கவனிக்காமல் இருந்துள்ளனர். பிள்ளைகள் சரிவர பார்த்துக் கொள்ளாததாலும், நோயால் அவதிப்பட்டு வந்ததாலும் வேதனை அடைந்த இளங்கோவன் தம்பதி தற்கொலை மூலம் உயிரை நீக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து வீட்டில் இருந்த சிலிண்டரை வெடிக்க வைத்துள்ளார் இளங்கோவன். இதில் அவரது மனைவி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இளங்கோவன் உடல் முழுக்க தீக்காயம் ஏற்பட்ட நிலையில் போராடிக் கொண்டிருந்தார். விரைந்து வந்த போலீஸார் தீயை அணைத்து விட்டு வீட்டுக்குள் போய்ப் பார்த்தபோது, மனைவியின் மடி மீது தலை வைத்தபடி தீயில் உடலின் முக்கால்வாசிப் பாகங்கள் கருகிய நிலையில் போராடிக் கொண்டிருந்தார் இளங்கோவன்.

அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்