சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலது தோள்பட்டையில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்திருந்தனர். இந்நிலையில் இந்த பிளேட்டை அகற்றுவதற்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு மே மாதம் வீட்டில் வழுக்கி விழுந்ததால் வைகோவுக்கு வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எலும்புகள் கூடுவதற்காக அவருக்கு பிளேட் வைக்கப்பட்டிருந்தது. தற்போது எலும்புகள் கூடி விட்டதால் அந்த பிளேட்டை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம் என டாக்டர்கள் பரிந்துரைத்ததாகவும், அதன் காரணமாகவே தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
80 வயதாகும் வைகோ, ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 1990களில் திமுக., உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய வைகோ, பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை துவக்கினார். 3 முறை ராஜ்யசபா எம்பி.,யாகவும், இரண்டு முறை லோக்சபா எம்பி.,யாகவும் பணியாற்றி உள்ளார். திமுக, அதிமுக, தேமுதிக என பல கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தமிழகத்தில் பல தேர்தல் களங்களை சந்தித்தவர் வைகோ. தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}