சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலது தோள்பட்டையில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்திருந்தனர். இந்நிலையில் இந்த பிளேட்டை அகற்றுவதற்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு மே மாதம் வீட்டில் வழுக்கி விழுந்ததால் வைகோவுக்கு வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எலும்புகள் கூடுவதற்காக அவருக்கு பிளேட் வைக்கப்பட்டிருந்தது. தற்போது எலும்புகள் கூடி விட்டதால் அந்த பிளேட்டை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம் என டாக்டர்கள் பரிந்துரைத்ததாகவும், அதன் காரணமாகவே தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
80 வயதாகும் வைகோ, ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 1990களில் திமுக., உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய வைகோ, பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை துவக்கினார். 3 முறை ராஜ்யசபா எம்பி.,யாகவும், இரண்டு முறை லோக்சபா எம்பி.,யாகவும் பணியாற்றி உள்ளார். திமுக, அதிமுக, தேமுதிக என பல கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தமிழகத்தில் பல தேர்தல் களங்களை சந்தித்தவர் வைகோ. தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
Gold price:அதிரடியாக குறைந்தது தங்கம் விலை...இன்று மட்டும் சவரனுக்கு ரூ.1,520 குறைவு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
{{comments.comment}}