சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலது தோள்பட்டையில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்திருந்தனர். இந்நிலையில் இந்த பிளேட்டை அகற்றுவதற்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு மே மாதம் வீட்டில் வழுக்கி விழுந்ததால் வைகோவுக்கு வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எலும்புகள் கூடுவதற்காக அவருக்கு பிளேட் வைக்கப்பட்டிருந்தது. தற்போது எலும்புகள் கூடி விட்டதால் அந்த பிளேட்டை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம் என டாக்டர்கள் பரிந்துரைத்ததாகவும், அதன் காரணமாகவே தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
80 வயதாகும் வைகோ, ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 1990களில் திமுக., உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய வைகோ, பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை துவக்கினார். 3 முறை ராஜ்யசபா எம்பி.,யாகவும், இரண்டு முறை லோக்சபா எம்பி.,யாகவும் பணியாற்றி உள்ளார். திமுக, அதிமுக, தேமுதிக என பல கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தமிழகத்தில் பல தேர்தல் களங்களை சந்தித்தவர் வைகோ. தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
{{comments.comment}}