சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலது தோள்பட்டையில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்திருந்தனர். இந்நிலையில் இந்த பிளேட்டை அகற்றுவதற்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு மே மாதம் வீட்டில் வழுக்கி விழுந்ததால் வைகோவுக்கு வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எலும்புகள் கூடுவதற்காக அவருக்கு பிளேட் வைக்கப்பட்டிருந்தது. தற்போது எலும்புகள் கூடி விட்டதால் அந்த பிளேட்டை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம் என டாக்டர்கள் பரிந்துரைத்ததாகவும், அதன் காரணமாகவே தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
80 வயதாகும் வைகோ, ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 1990களில் திமுக., உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய வைகோ, பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை துவக்கினார். 3 முறை ராஜ்யசபா எம்பி.,யாகவும், இரண்டு முறை லோக்சபா எம்பி.,யாகவும் பணியாற்றி உள்ளார். திமுக, அதிமுக, தேமுதிக என பல கட்சிகளுடனும் கூட்டணி வைத்து தமிழகத்தில் பல தேர்தல் களங்களை சந்தித்தவர் வைகோ. தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!
ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி
{{comments.comment}}