- J. லீலாவதி
அன்பின் அடையாளம்
ஆண்
அன்புக்கு பாத்திரம் ஆனவன்
ஆணவம் அறவே அறியாதவன்
இல்லத்தில் உள்ளோர்க்கு ஆறுதல் அவனே
ஈருயிரில் ஓர் உயிர் ஆனவன்
உழைப்பின் அடையாளம்
ஊதியம் மறைக்கத் தெரியாதவன்

எண் எழுத்து ஏது அறிந்திருந்தாலும்
ஏளனமாய் எதையும் பார்க்காதவன்
ஐயம் ஏதும் அறியாதவன்
ஒன்றும் புரியாது நடித்தாலும்
யோசித்து எதையும் முடிவெடுப்பான்
அவ்வை வயதை எட்டியும்
ஓய்வென்பதை அறியாதவன்
இருந்தும் இல்லத்தில் உள்ளோருக்கு
ஆறுதலாய் தோள் கொடுக்கும் ஒரு தோழனாய்
பிறர் கண்ணீருக்கு காரணம் அல்லாதவனாய்
தான் பெற்ற செல்வங்களை உதறித் தள்ளாதவனாய்
அவர்களை ஏற்றி விடும் ஏணியாய்
தன்னை நம்பியவர்களிடம் நேரம் செலவிடுபவனாய்
இருத்தல் எமக்கு போதுமே
(J. லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}