டிவிட்டர் வழியில் மெட்டா.. பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு காசு கொடுத்தால் ப்ளூ பேட்ஜ்!

Feb 20, 2023,11:46 AM IST
சான்பிரான்சிஸ்கோ: டிவிட்டர் சமீபத்தில் ப்ளூ டிக் முத்திரை பெறுவதை கட்டண சேவையாக மாற்றியது போல, மெட்டா நிறுவனமும் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் ப்ளூ பேட்ஜ் முத்திரயை கட்டண சேவையாக்கியுள்ளது.



ஞாயிற்றுக்கிழமை இந்த கட்டணச் சேவை அமலுக்கு வந்துள்ளதாக மெட்டாவின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார். "மெட்டா வெரிபைட்" என்ற இந்த சேவையை தொடங்கி வைத்த அவர் கட்டண விவரங்களையும் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த சேவையைப் பெறுவதற்கான கட்டணம் மாதம் 11.99 டாலர் ஆகும்.



எங்களது சேவையை மேலும் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாற்றும் முயற்சியே இந்த கட்டண அறிமுகம் என்று கூறியுள்ளார் மார்க்.  இந்த வாரம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இது அறிமுகமாகிறது. அடுத்து அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் அமலுக்கு வருமாம். ஏற்கனவே வெரிபைட் ஆனவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. அதேபோல வர்த்தக ரீதியிலான கணக்குகளுக்கு இந்த புதிய திட்டம் பொருந்தாது.

பேஸ்புக் நிறுவனம் ஒரு காலத்தில் முற்றிலும் இலவசமானதாக அறிவிக்கப்பட்டு எப்போதும் அது இலவசமாகவே இருக்கும் என்றும் மார்க் சக்கர்பர்க் பெருமிதத்துடன் கூறி வந்தார். பேஸ்புக் மற்றும் கூகுளுக்கு மிகப் பெரிய அளவில் விளம்பரங்கள் மூலம் வருமானமும் கிடைத்து வந்தது. ஆனால் 2019ம் ஆண்டுக்குப் பிறகு பேஸ்புக்கின் முகம் மாறிப் போனது. இலவசம் என்ற வார்த்தையை மெல்ல மெல்ல கைவிட ஆரம்பித்தார் மார்க். 

2022ம் ஆண்டு மெட்டா நிறுவனத்தின் வருவாய் முதல் முறையாக பெரும் சரிவைச்சந்தித்தது. 2012ம் ஆண்டுக்குப் பிறகு அது சந்தித்த முதல் வருவாய் சரிவு இதுதான். மேலும் டிக்டாக் உள்ளிட்டவற்றின் வளர்ச்சியால் பேஸ்புக் பெரும் அடி வாங்க ஆரம்பித்தது.  இதையடுத்து ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மார்க் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 11,000 ஊழியர்களை நீக்கப் போவதாக கடந்த நவம்பர் மாதம் அவர் அறிவித்தார். இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்