சென்னை: டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் மெட்ரோ இடையிலான மெட்ரோ ரயில் சேவை அவசர கால பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவசர கால பராமரிப்புப் பணிகள் காரணமாக டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ மற்றும் விமான நிலையம் மெட்ரோ இடையிலான சேவை இன்று நாள் முழுமைக்கும் ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள், ஆலந்தூர் மெட்ரோவில் இறங்கி தொடர்ந்து பயணிக்கலாம் என்றும் மெட்ரோ நிறுவனம் இன்று காலை அறிவித்திருந்தது.

அதேசமயம், ப்ளூ லைனில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், கிரீன் லைனில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ முதல் புனித தாமஸ் மலை மெட்ரோ வரையிலும் ரயில்கள் வழக்கம் போல செயல்படுகின்றன. இந்த மார்க்கங்களில் வாராந்திர அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது சீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளதால் வழக்கம் போல சென்டிரல் மெட்ரோவுக்கும், விமான நிலையம் மெட்ரோவுக்கும் இடையே போக்குவரத்துத் தொடங்கியிருப்பதாக மெட்ரோ நிறுவன செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மெட்ரோ சேவைகள் இயல்பு நிலையை அடைந்துள்ளன.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}