குடிநீர் விநியோகம் சரியில்லை.. மேட்டுப்பாளையத்தில் குமுறலை வெளியிட்ட குடும்பங்கள்!

Nov 18, 2025,03:56 PM IST

- J.லீலாவதி


மேட்டுப்பாளையம்: கோவையை அடுத்துள்ள மேட்டுப்பாளையத்தில் குடிநீர் விநியோகம் சரியில்லை என்று பொதுமக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் அறிவொளி நகரில் சுமார் 352 குடியிருப்புகள் 

(குடிசை வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்)  உள்ளன. இந்த வீடுகள் உள்ள பகுதியில் குடிநீர் விநியோகம் சரிவர இல்லை என்று கூறப்படுகிறது. குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். 




இவர்கள் குடிநீருக்காக இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் நடந்து தங்களுக்கு தேவையான நீரை எடுத்து வருகின்றனராம். இது தங்களுக்குப் பெரும் சிரமமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.


தற்போது மழையின் காரணமாக அந்த குடிநீரும் சேரும் சகதியுமாக கலங்கிப் போயுள்ளதால் குடிக்கும் தகுதியில் அவை இல்லை என்றும் மக்கள் குறிப்பாக பெண்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இன்று 18 . 11 . 25  மேட்டுப்பாளையம் குடிநீர் வாரியம் மூலம் 

அதிகாரிகள் வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர். இவர்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து நீரை தருவதாகவும் குழாய்களை அமைத்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர்.


இந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள் வேண்டும் என்றும் தங்களது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


(J.லீலாவதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

news

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்