சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில்ல், அணைக்கு வரும் 1.70 லட்சம் கன அடி நீரையும் அப்படியே வெளியேற்றி வருகின்றனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகளிலிருந்து நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.28 லட்சம் கன அடியில் இருந்து தற்போது 1.60 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் போகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதனால் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை அம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}