சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில்ல், அணைக்கு வரும் 1.70 லட்சம் கன அடி நீரையும் அப்படியே வெளியேற்றி வருகின்றனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகளிலிருந்து நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.28 லட்சம் கன அடியில் இருந்து தற்போது 1.60 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் போகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதனால் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை அம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}