சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில்ல், அணைக்கு வரும் 1.70 லட்சம் கன அடி நீரையும் அப்படியே வெளியேற்றி வருகின்றனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகளிலிருந்து நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.28 லட்சம் கன அடியில் இருந்து தற்போது 1.60 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் போகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதனால் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை அம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
{{comments.comment}}