சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில்ல், அணைக்கு வரும் 1.70 லட்சம் கன அடி நீரையும் அப்படியே வெளியேற்றி வருகின்றனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகளிலிருந்து நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.28 லட்சம் கன அடியில் இருந்து தற்போது 1.60 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் போகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது.
இதனால் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை அம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}