இஸ்லாமாபாத்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறது. 25 வருடங்களாக பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த மைக்ரோசாஃப்ட், தனது நடவடிக்கைகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, செயல்பாடுகளை சுருக்கி வந்த நிலையில், தற்போது முழுவதுமாக வெளியேறுகிறது.
2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானில் மைக்ரோசாஃப்ட் தனது சேவையை தொடங்கியது. தற்போது பாகிஸ்தானில் சூழல் சரியில்லாத காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானின் நிறுவனத் தலைவர் ஜவ்வாத் ரெஹ்மான் LinkedIn சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை தெரிவித்தார்.
இதுவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. Tech Radar என்ற இணையதளத்தின் செய்தியின்படி, பாகிஸ்தானில் முழு செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு, ஐந்து ஊழியர்களுடன் ஒரு தொடர்பு அலுவலகம் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் தனது சேவையை நிறுத்துவது அந்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 25 வருடங்களாக அந்நாட்டில் செயல்பட்டு வந்த ஒரு பெரிய நிறுவனம் வெளியேறுவது வருத்தமளிக்கிறது. ஜவ்வாத் ரெஹ்மான் தனது LinkedIn பதிவில் கூறுகையில், ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தான். மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் தனது செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொள்கிறது என்பதை இன்று நான் அறிந்தேன். கடைசியாக இருந்த சில ஊழியர்களுக்கும் முறையாகத் தெரிவிக்கப்பட்டது. சரியாக 25 வருடங்களுக்கு முன்பு, ஜூன் 2000-ல், மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானை தொடங்கி வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இது ஒரு நிறுவனத்தின் வெளியேற்றம் மட்டுமல்ல. நம் நாடு உருவாக்கியுள்ள சூழலின் ஒரு எச்சரிக்கை அறிகுறி. மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் கூட இங்கு நிலைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் விட்டுச் சென்ற வலுவான அடித்தளத்தை வைத்து அடுத்த குழுவினரும், பிராந்திய நிர்வாகமும் சரியாக செயல்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது என்றார் அவர்.
மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து வெளியேறுவது என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
தேனியில் கோலாகலம்: 79-வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி.. அ.ஹரிஸ் அசத்தல்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு என்னாச்சு?...லேட்டஸ்ட் அப்டேட் இதோ
Cooking Tips: சோயா சங்க் 65.. மொறுமொறுன்னு சாப்பிட சரியான சைட் டிஷ்!
Tn election 2026 தமிழகத்தில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது...6 மணிக்கு பிறகு அமலாகும் கட்டுப்பாடுகள்
மருதாணிச் செவப்பே!
Tn elections 2026 தமிழக தேர்தலுக்கு இன்னும் 2 நாள் மட்டுமே... பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது
திடீரென வரும் உறவும்… திடீரென விலகும் மனமும்!
Poems.. மனதில் என்றும் அழியாமல் தைக்கும் கலையே.. கவிதை!
சிந்தனைச் சிதறல்.. உலகின் உன்னதமான மொழி எது தெரியுமா?
{{comments.comment}}