பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!

Jul 05, 2025,02:35 PM IST

இஸ்லாமாபாத்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறது. 25 வருடங்களாக பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த மைக்ரோசாஃப்ட், தனது நடவடிக்கைகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, செயல்பாடுகளை சுருக்கி வந்த நிலையில், தற்போது முழுவதுமாக வெளியேறுகிறது. 


2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானில் மைக்ரோசாஃப்ட் தனது சேவையை தொடங்கியது. தற்போது பாகிஸ்தானில் சூழல் சரியில்லாத காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானின் நிறுவனத் தலைவர் ஜவ்வாத் ரெஹ்மான் LinkedIn சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை தெரிவித்தார். 


இதுவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. Tech Radar என்ற இணையதளத்தின் செய்தியின்படி, பாகிஸ்தானில் முழு செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு, ஐந்து ஊழியர்களுடன் ஒரு தொடர்பு அலுவலகம் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.




மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் தனது சேவையை நிறுத்துவது அந்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 25 வருடங்களாக அந்நாட்டில் செயல்பட்டு வந்த ஒரு பெரிய நிறுவனம் வெளியேறுவது வருத்தமளிக்கிறது. ஜவ்வாத் ரெஹ்மான் தனது LinkedIn பதிவில் கூறுகையில், ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தான். மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் தனது செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொள்கிறது என்பதை இன்று நான் அறிந்தேன். கடைசியாக இருந்த சில ஊழியர்களுக்கும் முறையாகத் தெரிவிக்கப்பட்டது. சரியாக 25 வருடங்களுக்கு முன்பு, ஜூன் 2000-ல், மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானை தொடங்கி வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.


இது ஒரு நிறுவனத்தின் வெளியேற்றம் மட்டுமல்ல. நம் நாடு உருவாக்கியுள்ள சூழலின் ஒரு எச்சரிக்கை அறிகுறி. மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் கூட இங்கு நிலைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் விட்டுச் சென்ற வலுவான அடித்தளத்தை வைத்து அடுத்த குழுவினரும், பிராந்திய நிர்வாகமும் சரியாக செயல்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது என்றார் அவர்.


மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து வெளியேறுவது என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

ஆசிரியர் ஓர் அகல்விளக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்