பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!

Jul 05, 2025,02:35 PM IST

இஸ்லாமாபாத்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறது. 25 வருடங்களாக பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த மைக்ரோசாஃப்ட், தனது நடவடிக்கைகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, செயல்பாடுகளை சுருக்கி வந்த நிலையில், தற்போது முழுவதுமாக வெளியேறுகிறது. 


2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானில் மைக்ரோசாஃப்ட் தனது சேவையை தொடங்கியது. தற்போது பாகிஸ்தானில் சூழல் சரியில்லாத காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானின் நிறுவனத் தலைவர் ஜவ்வாத் ரெஹ்மான் LinkedIn சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை தெரிவித்தார். 


இதுவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. Tech Radar என்ற இணையதளத்தின் செய்தியின்படி, பாகிஸ்தானில் முழு செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு, ஐந்து ஊழியர்களுடன் ஒரு தொடர்பு அலுவலகம் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.




மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பாகிஸ்தானில் தனது சேவையை நிறுத்துவது அந்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 25 வருடங்களாக அந்நாட்டில் செயல்பட்டு வந்த ஒரு பெரிய நிறுவனம் வெளியேறுவது வருத்தமளிக்கிறது. ஜவ்வாத் ரெஹ்மான் தனது LinkedIn பதிவில் கூறுகையில், ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது... மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தான். மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் தனது செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொள்கிறது என்பதை இன்று நான் அறிந்தேன். கடைசியாக இருந்த சில ஊழியர்களுக்கும் முறையாகத் தெரிவிக்கப்பட்டது. சரியாக 25 வருடங்களுக்கு முன்பு, ஜூன் 2000-ல், மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானை தொடங்கி வழிநடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.


இது ஒரு நிறுவனத்தின் வெளியேற்றம் மட்டுமல்ல. நம் நாடு உருவாக்கியுள்ள சூழலின் ஒரு எச்சரிக்கை அறிகுறி. மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் கூட இங்கு நிலைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் விட்டுச் சென்ற வலுவான அடித்தளத்தை வைத்து அடுத்த குழுவினரும், பிராந்திய நிர்வாகமும் சரியாக செயல்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது என்றார் அவர்.


மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து வெளியேறுவது என்பது அந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்