மிளகுத்தக்காளி என்ற மணத்தக்காளி

Jun 29, 2026,12:26 PM IST

- ஞா.சொர்ணதீபம்


மருந்தாய் மலர்ந்த முத்துக்கள்

கருமை முத்தாய் குலுங்கும் நீ,

காயம் குணமாக்கும் கருணை நீ!


வாய்ப்புண் வலியை வேரறுக்கும்,

வாழ்வின் நலத்தை வாரி வழங்கும்.


வயிற்றின் வேதனை தணிக்கும் தோழன்,

வலிமை தரும் இயற்கையின் பொக்கிஷம்.


கல்லீரல் காக்கும் காவலனாய்,

களைப்பை விரட்டும் கற்பகமாய்.




கசப்பில் மறைந்த இனிய மருந்தே,

கண்கள் கவரும் கருநிற விருந்தே!


உண்டோர் உடலில் உற்சாகம் பூக்கும்,

உயிரில் ஆரோக்கியம் என்றும் தழைக்கும்.


மனிதா !


"மருந்தைத் தேடி தூரம் செல்லாதே;

இயற்கை தரும் வரத்தை மதித்து உண்ணு;

ஆரோக்கிய வாழ்வை அன்புடன் அணைத்து வாழு!"


(ஞா.சொர்ணதீபம், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெடியரசம்பாளையம், பள்ளிபாளையம், ஒன்றியம் நாமக்கல் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்