தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே நேற்று அரசுப் பள்ளியில் குத்தி கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை இன்று வழங்கினார் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகில் உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த ஆசிரியை ரமணியும், அதே பகுதியை சேர்ந்த மதன்குமாரும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மதன் குமார் வீட்டிலிருந்து பெண் கேட்டுள்ளனர். ஆனால் ரமணியின் வீட்டார் இந்தத் திருமணத்தை விரும்பவில்லை போலும். இதனால் பெண் தர மறுத்துள்ளனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த மதன்குமார், ரமணி பள்ளியில் இருந்தபோது, உள்ளே புகுந்து ரமணியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். உடனே ரமணி மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த ஆசிரியர்கள் ரமணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்துள்ளார்.
மதன் குமார் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ரமணியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ரமணியை கொன்ற குற்றவாளிக்கும் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியை ரமணியின் பெற்றோரிடம் அமைச்சர் கோவி. செழியன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது ரமணியின் தாயார் கதறி அழுதார். அவருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
பயங்கரவாதம் தொடர்ந்தால் ஆபரேஷன் சிந்தூர் மீண்டும் துவங்கப்படும் : ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
புதியதோர் உலகு செய்வோம்!
படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்... மருத்துவனையில் அனுமதி!
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
{{comments.comment}}