ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

Nov 21, 2024,06:21 PM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே நேற்று அரசுப் பள்ளியில் குத்தி கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை இன்று வழங்கினார் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்.


தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகில் உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த ஆசிரியை ரமணியும், அதே பகுதியை சேர்ந்த  மதன்குமாரும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மதன் குமார் வீட்டிலிருந்து பெண் கேட்டுள்ளனர். ஆனால் ரமணியின் வீட்டார் இந்தத் திருமணத்தை விரும்பவில்லை போலும். இதனால் பெண் தர மறுத்துள்ளனர். 




இதனால், ஆத்திரம் அடைந்த மதன்குமார்,  ரமணி பள்ளியில் இருந்தபோது, உள்ளே புகுந்து ரமணியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். உடனே ரமணி மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த ஆசிரியர்கள் ரமணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்துள்ளார். 


மதன் குமார் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் ரமணியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ரமணியை கொன்ற குற்றவாளிக்கும் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 


இந்தப் பின்னணியில் இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியை ரமணியின் பெற்றோரிடம் அமைச்சர் கோவி. செழியன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது ரமணியின் தாயார் கதறி அழுதார். அவருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு

news

Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!

news

எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??

news

திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!

news

மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு

news

ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்