தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே நேற்று அரசுப் பள்ளியில் குத்தி கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை இன்று வழங்கினார் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகில் உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த ஆசிரியை ரமணியும், அதே பகுதியை சேர்ந்த மதன்குமாரும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மதன் குமார் வீட்டிலிருந்து பெண் கேட்டுள்ளனர். ஆனால் ரமணியின் வீட்டார் இந்தத் திருமணத்தை விரும்பவில்லை போலும். இதனால் பெண் தர மறுத்துள்ளனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த மதன்குமார், ரமணி பள்ளியில் இருந்தபோது, உள்ளே புகுந்து ரமணியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். உடனே ரமணி மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த ஆசிரியர்கள் ரமணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்துள்ளார்.
மதன் குமார் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ரமணியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ரமணியை கொன்ற குற்றவாளிக்கும் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியை ரமணியின் பெற்றோரிடம் அமைச்சர் கோவி. செழியன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது ரமணியின் தாயார் கதறி அழுதார். அவருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?
{{comments.comment}}