ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

Nov 21, 2024,06:21 PM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே நேற்று அரசுப் பள்ளியில் குத்தி கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகையை இன்று வழங்கினார் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்.


தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகில் உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்த ஆசிரியை ரமணியும், அதே பகுதியை சேர்ந்த  மதன்குமாரும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மதன் குமார் வீட்டிலிருந்து பெண் கேட்டுள்ளனர். ஆனால் ரமணியின் வீட்டார் இந்தத் திருமணத்தை விரும்பவில்லை போலும். இதனால் பெண் தர மறுத்துள்ளனர். 




இதனால், ஆத்திரம் அடைந்த மதன்குமார்,  ரமணி பள்ளியில் இருந்தபோது, உள்ளே புகுந்து ரமணியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். உடனே ரமணி மயங்கி கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்த ஆசிரியர்கள் ரமணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்துள்ளார். 


மதன் குமார் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் ரமணியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ரமணியை கொன்ற குற்றவாளிக்கும் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 


இந்தப் பின்னணியில் இன்று பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியை ரமணியின் பெற்றோரிடம் அமைச்சர் கோவி. செழியன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது ரமணியின் தாயார் கதறி அழுதார். அவருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்

news

இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு

news

ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்

news

மாம்பழம் சின்னத்தை முடக்கம்... ராமதாஸ் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

ஜனநாயகன் ரிலீசை தடுத்தது பாஜக.,வும், திமுக.,வும் தான்...ஆதவ் அர்ஜூனா பகிரங்க குற்றச்சாட்டு

news

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: 3-வது மொழிப்பாட வகுப்புகளை உடனடியாகத் தொடங்க அறிவுறுத்தல்

news

ஒரு முடிவா… அல்லது ஒரு தொடக்கமா?.. மனிதன், இயந்திரம், மற்றும் எதிர்காலத்தின் தேர்வு (10)

news

National Siblings Day: ஒரு கூட்டுக் கிளியாக.. இன்று உடன் பிறப்புகள் தினம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்