மக்கள் பாராட்டுகிறார்கள்.. சென்னையில் குறுகிய காலத்தில் மழை நீர் வெளியேற்றம்.. அமைச்சர் கே.என்.நேரு

Oct 16, 2024,05:52 PM IST

சென்னை: வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறுகிய காலத்தில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


சென்னையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள்  சந்திப்பின் போது பேசுகையில் கூறியதாவது: 

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அம்மா உணவகத்தில் விலை இல்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது. கிட்டதட்ட 398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65 ஆயிரம் பேர் விலை இல்லா உணவு அருந்தியுள்ளனர். 70 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 4.75 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன. அதே போல இந்த முறையும் விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. 




சென்னையில் நேற்று ஒரே நாளில் 17 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் 30 சென்டிமீட்டர் வரை கூட மழை பதிவாகி உள்ளது. ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்து இயல்புநிலைக்கு திரும்பி உள்ளனர். பெரும் மழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெரும் பாதிப்பிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.


அதிமுக ஆட்சியில் சுமார் 400 கிலோமீட்டர் தூரம் மழை நீர் வடிகால் பணிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. தற்போது 782 கிலோமீட்டர் தூரம் வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறுவறுத்தியுள்ளார். மழை நீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மழை நீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. இந்த முறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறுகிய காலத்தில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. 


சென்னையில் கன மழையால்  சுரங்கப்பாதையில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த முறை பாதிப்பு ஏற்படுத்திய வேளச்சேரி, நாராயணபுரம் ஏரிகள் இம்முறை பாதிப்பு இல்லை. முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர். தமிழக அரசின் துரித நடவடிக்கைகளை பொதுமக்கள் தற்போது பாராட்டி வருகின்றனர். கடந்தாண்டு மழையின் போது ஏற்பட்ட பாதிப்பால் பாடம் கற்று இந்தாண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மழைநீர் வடிகால் பணிகளில் சில அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அதனை நிறைவு செய்தது திமுக அரசுதான்.பல இடங்களில் நான் ஆய்வு செய்தேன் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. இரவில் இருந்த மழைநீர் காலையில் வடிந்த ஆதங்கத்தில் அதிமுகவினர் பேசுகின்றனர் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

news

திருக்கடையூரில் பிறந்த குங்கிலியக் கலய நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!

அதிகம் பார்க்கும் செய்திகள்