சென்னை: தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கடந்த 6ம் தேதி ஞாயிற்று கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். அவர் ஆபாசமாக பேசியது தொடர்பாக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பொன்முடிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், கழக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி அவர்கள், அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
அதுமட்டும் இன்றி, இதற்கு முன்னர் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிப்பதை ஓசி டிக்கெட் என்று கூறி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்த, சம்பவத்தையும் நினைவு கூர்ந்து, அவருடைய அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், தனது தவறுக்கு மன்னிப்புகேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பொன்முடி. அதில், தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி பேசியதற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். நீண்ட பொதுவாழ்க்கையில் உள்ள எனக்கு தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்... பிரதமர் மோடியுடனான சந்திப்பு ரத்து
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. 10 வருடங்களு்குப் பிறகு கனடா பயணம்
40 வயசாகும்போது நான் இதைத்தான் பண்ணப் போறேன்.. அசரடிக்கும் "லால் சலாம்" அனந்திகா!
கட்ட பஞ்சாயத்து செய்யவா மக்கள் ஓட்டு போட்டார்கள்? பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
ஐபிஎல் லைட்டை நாங்கதான் ஹேக் பண்ணோம் தெரியுமா.. காமெடி செய்த பாகிஸ்தான் அமைச்சர்!
கோவை, நீலகிரிக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
ரஜினிகாந்த், விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா? தவாக தலைவர் வேல்முருகன்
2026ல் தொடங்குகிறது சென்சஸ் கணக்கெடுப்பு.. முதலில் லடாக், காஷ்மீரில் தொடங்கும்.. மத்திய அரசு
பாமகவின் இரு தலைவர்களும் பேச வேண்டும்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி
{{comments.comment}}