அமைச்சர் ரகுபதியின் சட்டத்துறை.. துரைமுருகனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கீடு.. திடீர் இலாகா மாற்றம்

May 08, 2025,02:55 PM IST
சென்னை: அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

சமீபத்தில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் அமைச்சரவையில் ஒரு இலாகா மாற்றம் நடந்துள்ளது.



நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கணிமங்கள் மற்றும் சுரங்கத்துறை ஆகியவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. ரகுபதி வசம் இருந்த சட்டத்துறையை, துரைமுருகனுக்கு மாற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் அளித்த பரிந்துரையின்பேரில் இந்த இலாகா மாற்றத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக இனி அழைக்கப்படுவார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

களை கட்டும் மதுரை.. நாளை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.. பரபரக்கும் பாஜக பிரச்சாரம்

news

ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா

news

ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!

news

ஏன் யோசி.. எதற்காக எழுது.. எப்படி கண்டுபிடி.. மூடனாக இல்லாமல் .. அறிஞனாக மாறு!

news

அறிவியலே முன்னேற்றத்தின் அடிப்படை.. இந்தியாவைக் கொண்டாட வேண்டிய தருணம்!

news

இரண்டு நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை

news

செங்கிப்பட்டியில் மார்ச் 4ம் தேதி தவெக பரப்புரை: அனுமதி கோரி மனு

news

சென்னை மெட்ரோ: பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க அனுமதி!

news

வாரிசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்