அமைச்சர் ரகுபதியின் சட்டத்துறை.. துரைமுருகனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கீடு.. திடீர் இலாகா மாற்றம்

May 08, 2025,02:55 PM IST
சென்னை: அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

சமீபத்தில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் அமைச்சரவையில் ஒரு இலாகா மாற்றம் நடந்துள்ளது.



நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கணிமங்கள் மற்றும் சுரங்கத்துறை ஆகியவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. ரகுபதி வசம் இருந்த சட்டத்துறையை, துரைமுருகனுக்கு மாற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் அளித்த பரிந்துரையின்பேரில் இந்த இலாகா மாற்றத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக இனி அழைக்கப்படுவார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டி20 உலகக்கோப்பையில் திருப்பம்.. ‘புறக்கணிப்பு’ முடிவிலிருந்து பாகிஸ்தான் யூ-டர்ன்?

news

எழுந்தது முதல்.. இரவில் படுக்கையில் சாயும் வரை.. எங்கெங்கும் ஏஐ..!

news

Propse Day: காதலுக்கு முன்பு.. அன்பை வெளிப்படுத்துங்க.. அதை உணர்த்துங்க!

news

பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?

news

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

news

தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி

news

ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி

news

கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?

news

ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?

அதிகம் பார்க்கும் செய்திகள்