அமைச்சர் ரகுபதியின் சட்டத்துறை.. துரைமுருகனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கீடு.. திடீர் இலாகா மாற்றம்

May 08, 2025,02:55 PM IST
சென்னை: அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.

சமீபத்தில் புதிய அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் அமைச்சரவையில் ஒரு இலாகா மாற்றம் நடந்துள்ளது.



நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கணிமங்கள் மற்றும் சுரங்கத்துறை ஆகியவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. ரகுபதி வசம் இருந்த சட்டத்துறையை, துரைமுருகனுக்கு மாற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் அளித்த பரிந்துரையின்பேரில் இந்த இலாகா மாற்றத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி, இயற்கை வளங்கள் துறை அமைச்சராக இனி அழைக்கப்படுவார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!

news

மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

news

துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்

news

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்