நானொரு டிஸ்கோ டான்சர்.. மறக்க முடியாத மிதுன் சக்கரவர்த்தி.. தாதாசாஹேப் பால்கே விருது!

Sep 30, 2024,06:08 PM IST

டெல்லி:   இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் பட்டையைக் கிளப்பிய டான்ஸர் - ஸ்டைலிஷ் நடிகர் என்றால் அது மிதுன் சக்கரவர்த்திதான். அப்படி ஒரு கிரேஸ் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. காரணம், அவரது நடிப்பும், ஸ்டைலும், டான்ஸும்தான். பழம்பெரும் நடிகரான மிதுன் சக்கரவர்த்திக்கு மத்திய அரசு தாதாசாஹேப் பால்கே விருதினை அறிவித்துள்ளது.


இந்தியத் திரைத் துறைக்கு அவர் ஆற்றிய பெரும் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெங்காலியைத் தாய் மொழியாகக் கொண்ட மிதுன், இந்தித் திரையுலகில் ஒரு சூப்பர் ஸ்டாராக விளங்கியவர். பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.


அக்டோபர் 8ம் தேதி நடைபெறவுள்ள 70வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவின்போது மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கிக் கெளரவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.




74 வயதாகும் மிதுன் சக்கரவர்த்தியின் இயற்பெயர் கோரங்கா சக்கரவர்த்தி ஆகும். இவருக்கு ஹெலினா லூக் மற்றும் யோகிதா பாலி என இரு மனைவியர். ஹெலினா லூக்கை 1979ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டு, யோகிதாவை  திருமணம் செய்து கொண்டார் மிதுன் சக்கரவர்த்தி. மொத்தம் நான்கு குழந்தைகள் மிதுனுக்கு உள்ளனர். நடிகராக, தயாரிப்பாளராக, அரசியல்வாதியாக என இவருக்கு பல முகங்கள் உள்ளன. 


ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து விலகி பாஜகவுக்கு வந்து தற்போது அக்கட்சியில் நீடிக்கிறார். இந்த வருடம்தான் அவருக்கு பத்மபூஷன் விருது கிடைத்தது. இப்போது தாதா சாஹேப் பால்கே விருதும் கிடைத்து விட்டது.


தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று அசத்தியவர் மிதுன் சக்கரவர்த்தி. 1976ம் ஆண்டு இவர் நடித்த மிர்கயா படத்திற்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.  இவர் நடித்த டிஸ்கோ டான்ஸர், இந்தியா முழுவதும் மிதுனை பிரபலமாக்கியது. இந்தப் படம் தான் பின்னர் தமிழில் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு நடிப்பில் ரீமேக் ஆகி அவருக்கு புகழைக் கொடுத்தது என்பது நினைவிருக்கலாம். 


மிதுன் சக்கரவர்த்தி பெரும்பாலும் இந்தி, பெங்காலியில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ஒடியா மொழியிலும் நடித்துள்ளார். தமிழிலும் ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். அது யாகாவராயினும் நா காக்க. இதில் நடிகர் ஆதி ஹீரோவாக நடித்திருந்தார். முதலியார் என்ற கதாபாத்திரத்தில் மிதுன் நடித்திருந்தார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முகத்தில் முகம் பார்க்கலாம்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்