சென்னை: பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து வேறுபாடு பல நாட்களாக நீடித்து வருகிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திண்டாடி வருகின்றனர். அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். அதே நேரத்தில் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கி வருகிறார் அன்புமணி.
இந்நிலையில், ராமதாசுக்கு பக்கபலமாக இருக்கும் எம்எல்ஏ அருளை, நேற்று முன்தினம் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், பாமக நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு. எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ஜிகே மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகு தான் நீக்க முடியும். கட்சியிலிருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாமக கொறடா பொறுப்பில் இருந்தும் எம்.எல்.ஏ அருளை மாற்ற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டபேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். பாமக எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளனர். பாமக கொறடாவாக மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சிவக்குமாரை நியமிக்ககோரி மனு அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பாமக கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் தெரிவித்து வருகிறார். அருள் எம்எல்ஏ சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு அளிக்க உள்ளார்.பாமக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ஜிகே மணி, அருள் கொறடாவாக தொடர்வார் என்று அளித்திருக்கக்கூடிய கடிதத்தை சபாநாயகரை சந்தித்து நேரில் வழங்க உள்ளார்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}