காலை உணவுத் திட்டம் பிரமாதம்.. அப்படியே இதையும் பரிசீலியுங்கள் முதல்வரே.. கமல்ஹாசன்

Aug 26, 2023,11:08 AM IST
சென்னை: தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தற்போது தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், திருக்குவளையில் மறைந்த கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக பள்ளிப் பிள்ளைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காலை உணவு சூப்பராக இருப்பதாக வரவேற்றுள்ளனர். மேலும் இந்தத் திட்டம் மிகப் பெரிய சமூக நலத் திட்டமாகவும் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளது.



தற்போது தொடக்கப் பள்ளிகளில் மட்டும் இந்தத் திட்டம்  அமல்படுத்தப்படுகிறது. இதை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இத்தட்டத்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில்,  இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும். 

இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரம்பரிய நெல் ரகங்களையும்,  ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும். விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.



சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்