காலை உணவுத் திட்டம் பிரமாதம்.. அப்படியே இதையும் பரிசீலியுங்கள் முதல்வரே.. கமல்ஹாசன்

Aug 26, 2023,11:08 AM IST
சென்னை: தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டத்திற்குப் பாராட்டு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தற்போது தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், திருக்குவளையில் மறைந்த கருணாநிதி படித்த பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக பள்ளிப் பிள்ளைகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காலை உணவு சூப்பராக இருப்பதாக வரவேற்றுள்ளனர். மேலும் இந்தத் திட்டம் மிகப் பெரிய சமூக நலத் திட்டமாகவும் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளது.



தற்போது தொடக்கப் பள்ளிகளில் மட்டும் இந்தத் திட்டம்  அமல்படுத்தப்படுகிறது. இதை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இத்தட்டத்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில்,  இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும். 

இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரம்பரிய நெல் ரகங்களையும்,  ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும். விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.



சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்