ஈரோடு கிழக்கு.. கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு.. பெரும் நம்பிக்கையில் காங்கிரஸ்!

Jan 21, 2023,10:20 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் யாரை ஆதரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவே களம் காணவுள்ளது. பாஜக நிலைப்பாடு தெரியவில்லை. ஆனால் தேர்தல் பணிக்குழுவை அக்கட்சி அமைத்துள்ளது. எனவே அக்கட்சி தனித்துப் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதுதவிர நாம் தமிழர் கட்சி கட்டாயம் வேட்பாளரை நிறுத்தும் என்பதால் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி கண்டிப்பாக இருக்கும் என்று தெரிகிறது.  மறுபக்கம் மக்கள் நீதி மய்யம், ஓ.பன்னீர் செல்வம் பிரிவு அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 

சமீப காலமாக திமுகவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சிப்பதில்லை. மேலும் காங்கிரஸ் கட்சியுடனும் அவர் நெருங்கி வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக பேசினார். ராகுல் காந்தியுடன் தனியாக ஒரு பேட்டியிலும் கலந்து கொண்டார். எனவே கமல்ஹாசன் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் தனது கட்சியின் ஆதரவை காங்கிரஸுக்கு அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. ஆனால் கணிசமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மயிரிழையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியுற்றார் என்பது நினைவிருக்கலாம்.

கடந்த காலங்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நெருக்கம் காட்டிய நிலையில் தற்போது காங்கிரஸ் பக்கமும் கமல்ஹாசன் சாய்ந்து வருவதால்  இந்தத் தேர்தலில் கமல்ஹாசனின் நிலைப்பாடு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்