சென்னை: மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 17 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கிய பொழுதும், கடந்த வாரம் முதல் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, ஈரோடு, கடலூர், திருச்சி, திருவள்ளூர், நாகை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில்
வெயில் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெயிலும்,மழையும் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌரிகம் ஏற்படலாம்.
ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்... பிரதமர் மோடியுடனான சந்திப்பு ரத்து
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. 10 வருடங்களு்குப் பிறகு கனடா பயணம்
40 வயசாகும்போது நான் இதைத்தான் பண்ணப் போறேன்.. அசரடிக்கும் "லால் சலாம்" அனந்திகா!
கட்ட பஞ்சாயத்து செய்யவா மக்கள் ஓட்டு போட்டார்கள்? பூவை ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
ஐபிஎல் லைட்டை நாங்கதான் ஹேக் பண்ணோம் தெரியுமா.. காமெடி செய்த பாகிஸ்தான் அமைச்சர்!
கோவை, நீலகிரிக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
ரஜினிகாந்த், விஜயகாந்தை விட விஜய் என்ன பெரிய ஆளா? தவாக தலைவர் வேல்முருகன்
2026ல் தொடங்குகிறது சென்சஸ் கணக்கெடுப்பு.. முதலில் லடாக், காஷ்மீரில் தொடங்கும்.. மத்திய அரசு
பாமகவின் இரு தலைவர்களும் பேச வேண்டும்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி
{{comments.comment}}