தெலங்கானா காங்கிரஸ் அமைச்சரவையில்.. அமைச்சராக பதவியேற்றார் அஸாருதீன்

Oct 31, 2025,04:58 PM IST

ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான முகமது அசாருதீன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் இன்று அமைச்சராகப் பதவியேற்றார்.


ராஜ்பவனில் நடைபெற்ற இந்த விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அசாருதீனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். 


அசாருதீன் இணைந்ததன் மூலம், தெலங்கானா அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு அமைச்சர்களுக்கு இடம் உள்ளது. மாநில சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி, அதிகபட்சமாக 18 அமைச்சர்கள் வரை இருக்கலாம்.




அசாருதீனின் இந்த அமைச்சரவை பிரவேசம், காங்கிரஸுக்கு ஒரு முக்கியமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இது முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதி, தேர்தலில் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியின் பிஆர்எஸ் எம்எல்ஏ மகந்தி கோபிநாத், கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.


எனினும், தனது நியமனத்திற்கும், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அசாருதீன் திட்டவட்டமாக மறுத்தார். "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது கட்சியின் உயர் கமிட்டிக்கும், மக்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி. அமைச்சர் ஆனதுக்கும், ஜூப்ளி இடைத்தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவை இரண்டும் தனித்தனி விஷயங்கள், அவற்றை இணைத்துப் பார்க்கக் கூடாது," என்று அவர் பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "எனக்கு எந்தப் பொறுப்பு கொடுத்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக நேர்மையாக உழைப்பேன். ஜி. கிஷன் ரெட்டி என்ன சொன்னாலும் சரி. எனக்கு யாருடைய தேசபக்தி சான்றிதழும் தேவையில்லை," என்றும் அவர் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!

news

ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!

news

தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!

news

தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி

news

SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?

news

குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை

news

ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

news

இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்