கொல்கத்தா: இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் பேஸ் கிடாரிஸ்ட்டாக இருந்து வரும் மோகினி டே தனது விவாகரத்தை அறிவித்துள்ளார். கணவரை விட்டுப் பிரிந்து விட்டதாக அவர் சமூக வலைதளம் மூலமாக அறிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து அதிர்ச்சியே விலகாத நிலையில் தற்போது அவரது குழுவிலிருந்து இந்த விவாகரத்து செய்தி வந்துள்ளது. அடுத்தடுத்து வந்த இந்த விவாகரத்து செய்திகளால் இசைப் பிரியர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மோகினி டே. 28 வயதுதான் ஆகிறது. ஆனால் உலக அளவில் மிக முக்கியமான கிடார் கலைஞராக வலம் வருகிறார் மோகினி டே. ஜாகிர் உசேன், கியுன்ஸி ஜோன்ஸ், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
போர்ப்ஸ் இந்தியா இவரை 30 வயதுக்குள் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களில் ஒருவராக அங்கீகரித்து பாராட்டி கெளரவம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கணவர் மார்க்கிடமிருந்து பிரிவதாக மோகினி அறிவித்துள்ளார். தானும் மார்க்கும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். இது பரஸ்பரம் இருவரும் விரும்பி எடுத்த முடிவு. நாங்கள் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும் கூட தொழில் முறையிலான உறவு நீடிக்கும். நண்பர்களாக இருப்போம். எங்களது இசைப் பயணத்தை இது பாதிக்காது என்று கூறியுள்ளார் மோகினி டே.
பேஸ் கிடார் கலைஞராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகி என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் மோகினி டே. இந்தியாவில் முன்னணியில் உள்ள இளம் இசைக் கலைஞர்களில் இவரும் ஒருவர். 9 வயதிலேயே தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர் மோகினி. அவரது தந்தை சுஜாய் டேவும் ஒரு கிடார் கலைஞர்தான். தந்தையிடமிருந்து இசையை கறஅறுக் கொண்ட அவர் டிரம் கலைஞர் ரஞ்சித் பரோத் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமானார். தனது படா பூம் இசை ஆல்பத்தில் மோகினியை அறிமுகப்படுத்தி அவருக்கு நல்லதொரு உயர்வைக் கொடுத்தார் ரஞ்சித்.
ரஞ்சித் பரோத்தான் மோகினியை, ஏ. ஆர். ரஹ்மானுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். ஏ. ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் முக்கிய கிடாரிஸ்ட்டாக இருந்து வருகிறார் மோகினி. கோச்சடையான் படத்தில் இவர் பங்காற்றியுள்ளார். அதேபோல அரிமாநம்பி படத்திலும் இவரது கிடார் இசை இடம் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}