கொல்கத்தா: இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் பேஸ் கிடாரிஸ்ட்டாக இருந்து வரும் மோகினி டே தனது விவாகரத்தை அறிவித்துள்ளார். கணவரை விட்டுப் பிரிந்து விட்டதாக அவர் சமூக வலைதளம் மூலமாக அறிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து அதிர்ச்சியே விலகாத நிலையில் தற்போது அவரது குழுவிலிருந்து இந்த விவாகரத்து செய்தி வந்துள்ளது. அடுத்தடுத்து வந்த இந்த விவாகரத்து செய்திகளால் இசைப் பிரியர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மோகினி டே. 28 வயதுதான் ஆகிறது. ஆனால் உலக அளவில் மிக முக்கியமான கிடார் கலைஞராக வலம் வருகிறார் மோகினி டே. ஜாகிர் உசேன், கியுன்ஸி ஜோன்ஸ், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
போர்ப்ஸ் இந்தியா இவரை 30 வயதுக்குள் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களில் ஒருவராக அங்கீகரித்து பாராட்டி கெளரவம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கணவர் மார்க்கிடமிருந்து பிரிவதாக மோகினி அறிவித்துள்ளார். தானும் மார்க்கும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். இது பரஸ்பரம் இருவரும் விரும்பி எடுத்த முடிவு. நாங்கள் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும் கூட தொழில் முறையிலான உறவு நீடிக்கும். நண்பர்களாக இருப்போம். எங்களது இசைப் பயணத்தை இது பாதிக்காது என்று கூறியுள்ளார் மோகினி டே.
பேஸ் கிடார் கலைஞராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகி என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் மோகினி டே. இந்தியாவில் முன்னணியில் உள்ள இளம் இசைக் கலைஞர்களில் இவரும் ஒருவர். 9 வயதிலேயே தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர் மோகினி. அவரது தந்தை சுஜாய் டேவும் ஒரு கிடார் கலைஞர்தான். தந்தையிடமிருந்து இசையை கறஅறுக் கொண்ட அவர் டிரம் கலைஞர் ரஞ்சித் பரோத் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமானார். தனது படா பூம் இசை ஆல்பத்தில் மோகினியை அறிமுகப்படுத்தி அவருக்கு நல்லதொரு உயர்வைக் கொடுத்தார் ரஞ்சித்.
ரஞ்சித் பரோத்தான் மோகினியை, ஏ. ஆர். ரஹ்மானுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். ஏ. ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் முக்கிய கிடாரிஸ்ட்டாக இருந்து வருகிறார் மோகினி. கோச்சடையான் படத்தில் இவர் பங்காற்றியுள்ளார். அதேபோல அரிமாநம்பி படத்திலும் இவரது கிடார் இசை இடம் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}