Mohini Dey: கணவரைப் பிரிவதாக அறிவித்தார் இளம் பேஸ் கிடாரிஸ்ட் மோகினி டே!

Nov 20, 2024,04:40 PM IST

கொல்கத்தா: இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் பேஸ் கிடாரிஸ்ட்டாக இருந்து வரும் மோகினி டே  தனது விவாகரத்தை அறிவித்துள்ளார். கணவரை விட்டுப் பிரிந்து விட்டதாக அவர் சமூக வலைதளம் மூலமாக அறிவித்துள்ளார்.


ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து அதிர்ச்சியே விலகாத நிலையில் தற்போது அவரது குழுவிலிருந்து இந்த விவாகரத்து செய்தி வந்துள்ளது. அடுத்தடுத்து வந்த இந்த விவாகரத்து செய்திகளால் இசைப் பிரியர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.




கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மோகினி டே. 28 வயதுதான் ஆகிறது. ஆனால் உலக அளவில் மிக முக்கியமான கிடார் கலைஞராக வலம் வருகிறார் மோகினி டே. ஜாகிர் உசேன், கியுன்ஸி ஜோன்ஸ், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.


போர்ப்ஸ் இந்தியா இவரை 30 வயதுக்குள் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களில் ஒருவராக அங்கீகரித்து பாராட்டி கெளரவம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கணவர் மார்க்கிடமிருந்து பிரிவதாக மோகினி அறிவித்துள்ளார். தானும் மார்க்கும் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். இது பரஸ்பரம் இருவரும் விரும்பி எடுத்த முடிவு. நாங்கள் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும் கூட தொழில் முறையிலான உறவு நீடிக்கும். நண்பர்களாக இருப்போம். எங்களது இசைப் பயணத்தை இது பாதிக்காது என்று கூறியுள்ளார் மோகினி டே.


பேஸ் கிடார் கலைஞராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகி என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் மோகினி டே. இந்தியாவில் முன்னணியில் உள்ள இளம் இசைக் கலைஞர்களில் இவரும் ஒருவர். 9 வயதிலேயே தனது இசைப் பயணத்தைத் தொடங்கியவர் மோகினி. அவரது தந்தை சுஜாய் டேவும் ஒரு கிடார் கலைஞர்தான். தந்தையிடமிருந்து இசையை கறஅறுக் கொண்ட அவர் டிரம் கலைஞர் ரஞ்சித் பரோத் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமானார்.  தனது  படா பூம் இசை ஆல்பத்தில் மோகினியை அறிமுகப்படுத்தி அவருக்கு நல்லதொரு உயர்வைக் கொடுத்தார் ரஞ்சித். 


ரஞ்சித் பரோத்தான் மோகினியை, ஏ. ஆர். ரஹ்மானுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர். ஏ. ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் முக்கிய கிடாரிஸ்ட்டாக இருந்து வருகிறார் மோகினி. கோச்சடையான் படத்தில் இவர் பங்காற்றியுள்ளார். அதேபோல அரிமாநம்பி படத்திலும் இவரது கிடார் இசை இடம் பெற்றுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்