பாகிஸ்தான்.. பஸ் பாலத்திலிருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்து.. 40 பேர் பலி

Jan 29, 2023,01:26 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து கீழே விழுந்து தீப்பிடித்துக் கொண்டதில் அதில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவிலிருந்து  கராச்சிக்கு இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. லாஸ்பெலா என்ற இடத்தில் ஒரு பாலத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் பஸ் தீப்பிடித்துக் கொண்டதில் அதில்  பயணிகள் சிக்கிக் கொண்டனர். 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போய்விட்டன. 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.



பாகிஸ்தானில் பஸ் விபத்தும், சாலைவிபத்தும் அதிக அளவில் நடைபெறுகின்றன.  அங்கு சாலைகளும் மோசம், பேருந்துகளும் சரியாக இருப்பதில்லை என்பதே இதற்கு காரணம்.  ஒரே விபத்தில் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள்தான் அதிகம். காரணம், அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றிச் செல்வது. 2018ம் ஆண்டு பாகிஸ்தானில் சாலை விபத்துக்களில் 27,000 பேர் பலியானார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்