பாகிஸ்தான்.. பஸ் பாலத்திலிருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்து.. 40 பேர் பலி

Jan 29, 2023,01:26 PM IST
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஒரு பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து கீழே விழுந்து தீப்பிடித்துக் கொண்டதில் அதில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டாவிலிருந்து  கராச்சிக்கு இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. லாஸ்பெலா என்ற இடத்தில் ஒரு பாலத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் பஸ் தீப்பிடித்துக் கொண்டதில் அதில்  பயணிகள் சிக்கிக் கொண்டனர். 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போய்விட்டன. 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.



பாகிஸ்தானில் பஸ் விபத்தும், சாலைவிபத்தும் அதிக அளவில் நடைபெறுகின்றன.  அங்கு சாலைகளும் மோசம், பேருந்துகளும் சரியாக இருப்பதில்லை என்பதே இதற்கு காரணம்.  ஒரே விபத்தில் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள்தான் அதிகம். காரணம், அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றிச் செல்வது. 2018ம் ஆண்டு பாகிஸ்தானில் சாலை விபத்துக்களில் 27,000 பேர் பலியானார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்