அடேங்கப்பா சூப்பரு.. பொங்கலுக்கு மெட்ரோ ரயிலில் பயணித்த.. 8 லட்சம் பேர்!

Jan 19, 2023,10:27 AM IST
சென்னை: பொங்கல் விடுமுறையின் போது சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தமாக  8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



ஜனவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் விடுமுறை தினங்கள்ஆகும். இந்த சமயத்தில் சென்னை மெட்ரோ ரயிலை பல லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். மொத்தமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால் ஜனவரி 13ம் தேதி மட்டும் 3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை 21,731 பேர் பயன்படுத்தி பயணித்துள்ளனர். கிண்டியில் 14,649, திருமங்கலம் 13,607, விமான நிலையம் 12,909 பயணிகள் பயனித்துள்ளனர். 

ஜனவரி 17ம் தேதி 1.65 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். தற்போது சென்னை மெட்ரோ ரயில்களில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை சராசரியாக 2 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ஏற்பாடுகளை மெட்ரோ நிர்வாகம் செய்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்