அடேங்கப்பா சூப்பரு.. பொங்கலுக்கு மெட்ரோ ரயிலில் பயணித்த.. 8 லட்சம் பேர்!

Jan 19, 2023,10:27 AM IST
சென்னை: பொங்கல் விடுமுறையின் போது சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தமாக  8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



ஜனவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் விடுமுறை தினங்கள்ஆகும். இந்த சமயத்தில் சென்னை மெட்ரோ ரயிலை பல லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். மொத்தமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால் ஜனவரி 13ம் தேதி மட்டும் 3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை 21,731 பேர் பயன்படுத்தி பயணித்துள்ளனர். கிண்டியில் 14,649, திருமங்கலம் 13,607, விமான நிலையம் 12,909 பயணிகள் பயனித்துள்ளனர். 

ஜனவரி 17ம் தேதி 1.65 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். தற்போது சென்னை மெட்ரோ ரயில்களில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை சராசரியாக 2 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ஏற்பாடுகளை மெட்ரோ நிர்வாகம் செய்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்