சென்னை: சென்னை தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தெற்கு உஸ்மான் பாலத்திலிருந்து சிஐடி நகர் முதல் மெயின் ரோடு வரையிலான பாலத்தை விரிவாக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் ஜனவரி 28ம் தேதி முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு உஸ்மான் சாலை பாலத்திலிருந்து சிஐடி நகர் 3வது மெயின் ரோடு செல்வதற்காக தெற்கு உஸ்மான் சாலை வழியாக வரும் வாகனங்கள், கண்ணம்மாபேட்டை ஜங்ஷன் மற்றும் தென் மேற்கு போக் சாலை வழியாக செல்ல வேண்டும்.
தெற்கு உஸ்மான் பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலைக்கு செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், மேட்லி ஜங்ஷன் - பர்கிட் சாலை - மூப்பாரப்பன் தெரு -லிங்க் ரோடு - அண்ணா சாலை நந்தனம் ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.
அரங்கநாதன் சுரங்கப் பாதையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை, கண்ணம்மாப்பேட்டை ஜங்ஷன் வழியாக சிஐடி நகர் 3வது மெயின் ரோடு செல்ல வேண்டிய எம்டிசி பஸ்கள், மேற்கு சிஐடி நகர், வடக்கு தெரு வழியாக திருப்பி விடப்படும்.
அண்ணா சாலை, சிஐடி முதலாவது மெயின் ரோடிலிருந்து தி.நகர் பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல தெற்கு உஸ்மான் சாலையில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}