சென்னை: சென்னை தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தெற்கு உஸ்மான் பாலத்திலிருந்து சிஐடி நகர் முதல் மெயின் ரோடு வரையிலான பாலத்தை விரிவாக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் ஜனவரி 28ம் தேதி முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு உஸ்மான் சாலை பாலத்திலிருந்து சிஐடி நகர் 3வது மெயின் ரோடு செல்வதற்காக தெற்கு உஸ்மான் சாலை வழியாக வரும் வாகனங்கள், கண்ணம்மாபேட்டை ஜங்ஷன் மற்றும் தென் மேற்கு போக் சாலை வழியாக செல்ல வேண்டும்.
தெற்கு உஸ்மான் பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலைக்கு செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், மேட்லி ஜங்ஷன் - பர்கிட் சாலை - மூப்பாரப்பன் தெரு -லிங்க் ரோடு - அண்ணா சாலை நந்தனம் ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.
அரங்கநாதன் சுரங்கப் பாதையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை, கண்ணம்மாப்பேட்டை ஜங்ஷன் வழியாக சிஐடி நகர் 3வது மெயின் ரோடு செல்ல வேண்டிய எம்டிசி பஸ்கள், மேற்கு சிஐடி நகர், வடக்கு தெரு வழியாக திருப்பி விடப்படும்.
அண்ணா சாலை, சிஐடி முதலாவது மெயின் ரோடிலிருந்து தி.நகர் பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல தெற்கு உஸ்மான் சாலையில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}