சென்னை: சென்னை தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தெற்கு உஸ்மான் பாலத்திலிருந்து சிஐடி நகர் முதல் மெயின் ரோடு வரையிலான பாலத்தை விரிவாக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் ஜனவரி 28ம் தேதி முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு உஸ்மான் சாலை பாலத்திலிருந்து சிஐடி நகர் 3வது மெயின் ரோடு செல்வதற்காக தெற்கு உஸ்மான் சாலை வழியாக வரும் வாகனங்கள், கண்ணம்மாபேட்டை ஜங்ஷன் மற்றும் தென் மேற்கு போக் சாலை வழியாக செல்ல வேண்டும்.
தெற்கு உஸ்மான் பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலைக்கு செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், மேட்லி ஜங்ஷன் - பர்கிட் சாலை - மூப்பாரப்பன் தெரு -லிங்க் ரோடு - அண்ணா சாலை நந்தனம் ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.
அரங்கநாதன் சுரங்கப் பாதையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை, கண்ணம்மாப்பேட்டை ஜங்ஷன் வழியாக சிஐடி நகர் 3வது மெயின் ரோடு செல்ல வேண்டிய எம்டிசி பஸ்கள், மேற்கு சிஐடி நகர், வடக்கு தெரு வழியாக திருப்பி விடப்படும்.
அண்ணா சாலை, சிஐடி முதலாவது மெயின் ரோடிலிருந்து தி.நகர் பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல தெற்கு உஸ்மான் சாலையில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}