சென்னை: சென்னை தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தெற்கு உஸ்மான் பாலத்திலிருந்து சிஐடி நகர் முதல் மெயின் ரோடு வரையிலான பாலத்தை விரிவாக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் ஜனவரி 28ம் தேதி முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு உஸ்மான் சாலை பாலத்திலிருந்து சிஐடி நகர் 3வது மெயின் ரோடு செல்வதற்காக தெற்கு உஸ்மான் சாலை வழியாக வரும் வாகனங்கள், கண்ணம்மாபேட்டை ஜங்ஷன் மற்றும் தென் மேற்கு போக் சாலை வழியாக செல்ல வேண்டும்.
தெற்கு உஸ்மான் பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலைக்கு செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், மேட்லி ஜங்ஷன் - பர்கிட் சாலை - மூப்பாரப்பன் தெரு -லிங்க் ரோடு - அண்ணா சாலை நந்தனம் ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.
அரங்கநாதன் சுரங்கப் பாதையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை, கண்ணம்மாப்பேட்டை ஜங்ஷன் வழியாக சிஐடி நகர் 3வது மெயின் ரோடு செல்ல வேண்டிய எம்டிசி பஸ்கள், மேற்கு சிஐடி நகர், வடக்கு தெரு வழியாக திருப்பி விடப்படும்.
அண்ணா சாலை, சிஐடி முதலாவது மெயின் ரோடிலிருந்து தி.நகர் பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல தெற்கு உஸ்மான் சாலையில் பயணிக்கலாம் என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}