தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரும் என் மகன்தான்.. வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா தாயின் வெள்ளை மனசு!

Aug 09, 2024,05:56 PM IST

பானிபட், ஹரியானா: ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அபாரமாக ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்து விட்டார்.


இருப்பினும் இந்த சீசனில் சிறந்த தூரத்தை நீரஜ் சோப்ரா நேற்று எட்டிப் பிடித்தார். அவர் 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார். ஆனால் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஒலிம்பிக் போட்டிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு காயங்களால் அவதிப்பட்டு வந்தார் நீரஜ் சோப்ரா. இதனால் கடந்த மே மாதம் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் கூட அவர் பங்கேற்கவில்லை.  




காயங்களிலிருந்து மீண்டு இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வந்தார். இருப்பினும் தங்கம் நழுவிப் போனது. ஆனாலும் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவை நாடே வாழ்த்தி மகிழ்கிறது.


ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் உள்ள நீரஜ் சோப்ராவின் இல்லத்தில் ஊர் மக்கள், உறவினர்கள், குடும்பத்தினர் கூடி இனிப்புகள் பரிமாறிக் கொண்டு மகிழ்ந்தனர். நீரஜ் சோப்ராவின் தந்தை சதீஷ் குமார் கூறுகையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இது மகிழ்ச்சி தருகிறது. அவரது வலிதான் வெள்ளிப் பதக்கத்தோடு அவரை நிறுத்தி விட்டது. இல்லாவிட்டால் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார் என்றார்.




நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறுகையில், எனது மகன் சொன்னபடி பதக்கம் வென்று விட்டான். இனி அவனுக்குப் பிடித்ததை செய்து கொடுத்து சாப்பிட வைக்க ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.  நாங்கள் எல்லோரும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். வெள்ளி என்றாலும் கூட அதுவும் தங்கம் போலத்தான். தங்கம் வென்ற வீரரும் எனது மகன்தான் என்றார் புன்னகைத்தபடி.


என்ன ஒரு அழகான வாழ்த்து பாருங்கள்!

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்