வாரத்திற்கு 90 மணி நேர வேலை... எல் அண்ட் டி சிஇஓ.,வுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் சூப்பர் பதில்!

Jan 10, 2025,08:20 PM IST

சென்னை: ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தில் 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற எல் அண்ட் டி நிறுவனர் சுப்பிரமணியன் கருத்து தற்போது பேசு பொருளாகியுள்ளது. அதேசமயம் இந்த கருத்தால் கொதித்த எம் பி சு.வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் வருந்துகிறேன். அப்படி என்னால் அதை செய்ய முடிந்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். சாத்தியமான உழைப்பை போட்டால் தான் அசாத்திய விளைவு கிடைக்கும்" என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யம் ஊழியர்களிடையே கருத்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வாரத்தில் 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற எல் அண்ட் டி  நிறுவனத் தலைவரின் கருத்தால் கொதித்து எழுந்த எம்பி இது குறித்து தனது ட்விட்டர்  பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,  "வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார். தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய  வருடத்தை விட 43 சதவிகித உயர்வு. தான் மேலும் லாபமடைய  தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார். 



அலெக்சாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா? சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான். தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா? இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.

நீங்கள் செல்வம் பெருக்க, தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டு வரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

எல் அண்ட் டி நிறுவன தலைவர் சுப்ரமணியத்தின் பேச்சும், அதற்கு எம்.பி., சு.வெங்கடேசன் அளித்துள்ள காட்டமான பதிலும் தான் தற்போது சோஷியல் மீடியாவில் செம டிரெண்டிங் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. எம்.பி., சு.வெங்கடேசனின் கருத்திற்கு சாமானிய மக்களிடம் இருந்து ஆதரவுகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்